districts

img

பிரணவ் ஜுவல்லரியிடம் பணத்தை இழந்தவர்களை மிரட்டும் காவல் அதிகாரியை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, நவ.3- மக்கள் செலுத்திய பல கோடி ரூபாய் பணத்துடன் தலைமறைவாகி யுள்ள பிரணவ் ஜுவல்லரி நிறுவன முதலாளி பங்குதாரர்களை கைது செய்யாமல், பாதிக்கப்பட்ட மக்களை குற்றவாளிகளைப் போல் நடத்தும் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறை அதிகாரியை கண்டித்தும், கொள்ளையடித்த கூட்டத்திற்கு உடந் தையாக இருப்பவர்களை கண்டறிந்து கைது செய்ய வேண்டும், பிரணவ் முதலாளியின் சொத்துக்கள் மற்றும் பினாமி சொத்துக்கள் முழுவதையும் கைப்பற்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்க வேண் டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளி யன்று மன்னார்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாமன்ற உறுப்பினர் சுரேஷ் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர்  ஸ்ரீதர், மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன் ஆகியோர் பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்க வேண்டும், கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து பொதுமக்களி டம் பல கோடி வசூல் செய்யும் நிறு வனங்களை கட்டுப்படுத்த சட்டம் இயற்ற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத் தில் வலியுறுத்தப்பட்டது.