districts

img

டிரான்ஸ்பார்மர் அமைக்கக் கோரி சிபிஎம் போராட்டம்

மயிலாடுதுறை, ஜூலை 24- மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம் இலுப்பூர் - சங்கரன்பந்தல் மின்வா ரிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. கட்சியின் ஒன்றியச் செய லாளர் ஏ.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.  சங்கரன்பந்தல் மின்வாரிய அலுவ லகத்தின்கீழ் சங்கரன்பந்தல், திருவிளை யாட்டம், நல்லாடை, அரசூர், வதிஸ்டாச்சேரி,  கொடைவிளாகம், எரவாஞ்சேரி, நெடுவா சல், கூடலூர் உள்ளிட்ட 20- க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு மின் விநியோகம் செய் யப்பட்டு வரும் நிலையில், ஒவ்வொரு நாளும்  மின்தடையும், குறைந்த மின் அழுத்தத்தா லும் அப்பகுதி மக்கள் கடும் இன்னல்க ளுக்கு ஆளாகி வருகின்றனர்.  குறிப்பாக இலுப்பூர் வடக்குத்தெரு பகுதியில் மின் கம்பத்தின் உயரத்தை அதி கரிக்க வேண்டுமென தொடர் கோரிக்கை விடுத்தும் கண்டு கொள்ளவில்லையாம். மேலும் குறைந்த மின் அழுத்தத்தால் நாள் தோறும் அவதிப்படுகிறோம்; தொடர் மின்த டையால் கடும் இன்னல்களுக்கு ஆளாகும் நிலை நீடிக்கிறது; புதிதாக அப்பகுதியில் டிரான்ஸ்பார்ம் அமைக்க வேண்டுமென கோ ரிக்கை விடுத்தும், அலட்சியம் காட்டுவதாக குற்றம் சாட்டப்பட்டது. திருவிளையாட்டம் கிராமத்தில் சாதாரண  மின்தடை ஏற்பட்டு பீஸ் போடுவதற்கே பல  மணி நேரமாகி விடுகிறது. திருவிளை யாட்டம் மின்பாதை ஆய்வாளராக உள்ள  ஜெனகர் என்பவர் பொதுமக்கள் பலரிட மும் கையூட்டு பெறுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். மீட்டர் மாற்றம் செய்யவும்,  புதிய மின் இணைப்பு பெறவும் ஆயிரக்கணக் கில் பணம் பறித்து ஏமாற்றுவதாகவும் பல  புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் முறை யிட்டாலும், எந்தவித நடவடிக்கையும் இது வரை இல்லை. மாலை நேரத்தில் மின்தடை  ஏற்பட்டால் இரவு முழுவதும் சரிசெய்யப்படா மல் அடுத்த நாள் சரி செய்வதாக கூறப் படுகிறது. ஏற்கனவே மின் கட்டண உயர்வால் அவ திப்படும் மக்களை மேலும் மேலும் சித்ர வதை செய்யும் அளவுக்கு தொடர் மின்தடை,  குறைந்த மின் அழுத்தம் போன்றவை நீடிக்கின்றன. மின்வாரிய அதிகாரிகள் பிரச்ச னைகளை உடனுக்குடன் சரிசெய்யாமல் அலட்சியம் செய்வதாலேயே, தீர்வு ஏற்படா மல் மக்கள் அவதிப்படுவதாக குற்றம் சாட்டப் பட்ட நிலையில் இந்தப் போராட்டம் நடை பெற்றது. கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் காபிரியேல், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஆசிக் ரஹ்மான், ஐயப்பன், கிளைச் செய லாளர் பாலகிருஷ்ணன் மற்றும் இலுப்பூர் வடக்குத் தெரு கிராம பொறுப்பாளர்கள் கண்டன உரையாற்றினர். தொடர்ந்து அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஒரு வாரத்தில் கோரிக் கைகளை நிறைவேற்றுவதாக உறுதிய ளித்தனர். இதையடுத்து போராட்டம் தற்காலி கமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.