districts

img

பருத்தியூரில் பெண் படுகொலை உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க கோரி சிபிஎம் போராட்டம்

திருவாரூர், அக்.28 - கொரடாச்சேரி ஒன்றியம், பருத்தியூர் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட கன்னிகாஈஸ்வரியின் படுகொலையில் உண்மையான குற்றவாளிகளை கண்டு பிடிக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக திங்களன்று கண்கொடுத்த வனிதம் கடைவீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம், பருத்தியூர் கிராமத்தில் 9.10.2024 அன்று நாராயணன் (64) என்ற விவசாயியின் மனைவி கன்னிகாஈஸ்வரி (54) என்ற பெண், மிக கொடூரமான முறையில் படு கொலை செய்யப்பட்டுள்ளார். இதில், உண்மையான குற்றவாளியை கண்டு பிடிக்காமல், காவல்துறையினர் விசாரணை  என்ற பெயரில் கிராம மக்களை சட்டத் திற்கு விரோதமான முறையில் அச்சுறுத்து கின்றனர். இதை கண்டித்தும், உண்மையான குற்ற வாளியை உடனடியாக கண்டுபிடிக்க வலி யுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் கொர டாச்சேரி ஒன்றியச் செயலாளர் கே.கோபி ராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலை வர் எஸ்.தம்புசாமி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.முருகையன் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றி னர். சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் கே. சீனிவாசன், விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய  செயலாளர் கே.செந்தில் மற்றும் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிளை செய லாளர்கள், பருத்தியூர், கண்கொடுத்த வனிதம் உள்ளிட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.