திருச்சிராப்பள்ளி, பிப்.2 - திருச்சி புறநகர் மாவட் டம் வையம்பட்டி ஒன்றியத் தில் நூறுநாள் வேலையை முழுமையாக வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் வெள்ளைச்சாமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்ட செயற் குழு உறுப்பினர் பன்னீர் செல்வம், மாவட்டக் குழு உறுப்பினர் கண்ணன் ஆகி யோர் பேசினர். ஆர்ப்பாட் டத்தில் 150-க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்ட னர். முருகன் நன்றி கூறி னார். பின்னர் ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.