கரூர், ஆக. 8 - கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம், பவித்திரம் ஊராட்சியில் சாலை, மின் விளக்கு, பொது கழிப்பறைகள் அமைத்து கொடுக்க வேண்டும். ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும், அப்பகு தியில் வாழும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், மேல் நிலை நீர் தேக்க தொட்டி களை மாதம் தோறும் சுத்தம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பவித்திரம் கிளை சார்பில் கோரிக்கை விளக்க தெருமுனை கூட்டம் மற்றும் கோரிக்கை மனு கொடுக்கும் போராட்டம் பவித்திரம் கடைவீதியில் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஒன்றிய குழு உறுப்பி னர் ப.சரவணன் தலைமை வகித்தார். கிளை செயலாளர் பழனி வரவேற்று பேசினார். கட்சியின் கரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கா.கந்தசாமி, ஒன்றிய செயலா ளர் சி.ஆர்.ராஜாமுகமது, மாவட்ட குழு உறுப்பினர்கள் எம்.சுப்பிரமணியன், எம்.ராஜேந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். பொதுமக்களிடம் பெறப் பட்ட கோரிக்கை மனுக்களை ஊராட்சி மன்ற தலைவரிடம் வழங்கினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.