districts

img

நியாயவிலை கடைக்கு சொந்தக் கட்டடம் கேட்டு சிபிஎம் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், டிச.19 -  நியாய விலைக் கடைக்கு சொந்தக் கட்டடம் கட்டித் தர வேண்டும் எனக் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஒன்றி யம், வரகூர், அம்மையகரம் கிராமங்களில் 600- க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ள னர். இப்பகுதியில் உள்ள நியாய விலைக் கடை தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வருகிறது. எனவே, நியாய விலைக் கடைக்கு நிரந்தரமாக சொந்தக் கட்டிடம் கட்டித்  தர வேண்டும் என வலியுறுத்தி வரகூர் கடைத் தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றியக் குழு  உறுப்பினர் எம்.ராம் தலைமை வகித்தார். ஒன்றி யக் குழு உறுப்பினர்கள் கே.மதியழகன், எம்.கதி ரவன், கிளை செயலாளர்கள் அம்மையகரம் முரு கானந்தம், வரகூர் எம்.சௌந்தர்ராஜன் மற்றும் கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுடன் சமரச பேச்சு வார்த்தை நடத்தி, நியாய விலைக் கடைக்கு, விரைவில் சொந்தக் கட்டடம் கட்டித் தரப்படும் எனக் கூறியதோடு, இடத்தை அளவீடு செய்து சென்றனர்.