districts

img

தப்பளாம்புலியூரில் 100 நாள் வேலை கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

 திருவாரூர்,ஜூலை.11- திருவாரூர் ஒன்றியம், தப்பளாம்புலியூர் ஊராட்சி யில் 100 நாள் வேலையை உடனடியாக துவங்கிட வேண்டும், அடிப்படை வசதி களை செய்திட வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தப்பளாம்புலியூர் கடைதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச்செயலாளர் வி. கஜேந்திரன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் உரையாற்றினார்.  ஜூலை 15ஆம் தேதிக்குள் கோரிக் கைகளை நிறைவேற விட்டால் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று கூறினார். திருவாரூர் ஒன்றிய செய லாளர் என்.இடும்பையன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் பி.கோமதி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.  . நிறைவாக தப்ப ளாம்புலியூர் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் மூர்த்தி யிடம் கோரிக்கைகளை வலி யுறுத்தி மனு அளிக்கப்பட்டது.