தஞ்சாவூர், ஆக.29 - தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை சிவக் கொல்லை பகுதிநேர நியாய விலைக் கடையில் நடக்கும் முறைகேடுகளைக் கண்டி த்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப் பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, கிளைச் செயலாளர் என்.விஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற் குழு உறுப்பினர் எம்.செல்வம், பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் எஸ். கந்தசாமி ஆகியோர் உரை யாற்றினர். இதில், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், “பட்டுக்கோட்டை சிவக் கொல்லையில் உள்ள பகுதி நேர நியாய விலைக் கடை யில் அனைவருக்கும் அத்தி யாவசிய பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். குடும்ப அட்டை தாரர்கள் அனைவருக்கும் அரிசி, மண்ணெண்ணெய், பாமாயில், சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொ ருட்களை எடை குறையா மல் வழங்க வேண்டும். கடை யை உரிய நேரத்தில் திறந்து என வலியுறுத்தப்பட்டது.