districts

img

மக்கள் விரோத ஒன்றிய அரசை கண்டித்து சிபிஎம் பிரச்சார இயக்கம்

மயிலாடுதுறை, நவ.13 - மக்கள் விரோத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. பிரச்சாரத்திற்கு சீர்காழி ஒன்றியச் செய லாளர் வழக்கறிஞர் ஞானபிரகாசம் தலைமை  வகித்தார். வைத்தீஸ்வரன் கோவில், புங்க னூர், கொண்டல், அண்ணா பஜார் மற்றும் மதகடி, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற பிரச்சாரத்தை கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.பி.மார்க்ஸ் துவக்கி வைத்தார். மாலையில் மங்கைமடம் கடைத்தெரு வில் நிறைவடைந்த  பிரச்சார இயக்கத்தை மாவட்டக் குழு உறுப்பினர் கே.அசோகன் நிறைவு செய்து உரையாற்றினார். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கரிகாலன்,  குமார் பிரபாகரன், கல்பனா, அமிர்த லிங்கம், சண்முகம், மூத்த தோழர்கள் நாகையா, செல்லப்பன், பெருமாள்பாலு, பன்னீர்செல்வம், பழனிவேல் மற்றும் கிளைச்  செயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.