மயிலாடுதுறை, நவ.10 - ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத, மதவாத போக்கை கண்டித்து மயிலாடு துறை மாவட்டம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேசம் தழுவிய பிரச்சார இயக்கம் நடைபெற்றது. செம்பனார்கோவில் ஒன்றியச் செய லாளர் கே.பி.மார்க்ஸ் தலைமையில் ஆக்கூர் முக்கூட்டில் நடந்த பிரச்சாரத்தை மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் துவக்கி வைத்து உரையாற்றினார். ஆக்கூர், ஆக்கூர் டவுன், மடப்புரம், காள கஸ்திநாதபுரம், வடகரை, இளையாளூர், செம்பனார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற பிரச்சாரம், பரசலூர் செல்வம் சதுக்கத்தில் நிறைவடைந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.துரைராஜ் பிரச்சாரத்தை நிறைவு செய்து சிறப்புரை யாற்றினார். மாவட்டக் குழு, ஒன்றியக் குழு உறுப்பினர் கள் மற்றும் கிளைச் செயலாளர்கள் உரை யாற்றினர். தரங்கம்பாடி ஒன்றியச் செயலாளர் ஏ.ரவிச்சந்திரன் தலைமையில் திருவிளை யாட்டம் கடைவீதியில் துவங்கிய பிரச்சா ரத்தை மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் துவக்கி வைத்து உரையாற்றினார். அரசூர், வேலம்புதுக்குடி, நல்லாடை, இலுப்பூர் சங்கரன்பந்தல், திருவிடைக்கழி, எடுத்துக்கட்டி, திருக்களாச்சேரி, ஆயப்பாடி, காட்டுச்சேரி, தில்லையாடி, துடரிப் பேட்டை, டி.மணல்மேடு, திருக்கடையூர் உள்ளிட்ட 15 இடங்களில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. திருக்கடையூரில் நிறைவடைந்த பிரச்சார இயக்கத்தை நிறைவு செய்து, மாவட்ட செயற் குழு உறுப்பினர் டி.சிம்சன் உரையாற்றி னார். மாவட்டக் குழு, ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் ஒவ்வொரு மையங்களிலும் உரை யாற்றினர். கிளைச் செயலாளர்கள், கட்சியின் முன்னணி ஊழியர்கள் பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.