districts

img

எங்கள் ஊருக்கு தார்ச்சாலை அமைத்து தரப்படுமா?

கரூர், அக்.30- கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குளித்தலை ஒன்றியக் குழு சார்பில், கட்சியின் மாவட்டச் செய லாளர் மா.ஜோதிபாசு தலைமை யில் ஆட்சியரிடம் மனு அளிக்கப் பட்டது. இதில் கட்சியின் குளித்தலை ஒன்றிய  செயலாளர் இரா.முத்துச் செல்வன் மற்றும் ஊர் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அம்மனுவில், “கரூர் மாவட்டம்,  குளித்தலை வட்டம், மருதூர் பேரூ ராட்சிக்குட்பட்ட விஸ்வநாதபுரம், சுப்பன் ஆசாரிகளத்தில், 200 ஆண்டு களுக்கும் மேலாக 30 குடும்பங்கள் வசித்து வருகிறோம்.  எங்கள் ஊரில், விஸ்வநாதபுரம் பிரிவிலிருந்து கன்னிவாய்க்கால் வரை தார்ச்சாலை அமைத்து கொடுக்க வலியுறுத்தி, கடந்த 4 ஆண்டுகளாக மருதூர் பேரூராட்சி செயல் அலுவலர் முதல் தமிழக முதல்வர் வரை அனைவருக்கும் மனுக்கள் கொடுத்துள்ளோம். மேலும்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலை மையில் மருதூர் பேரூராட்சி அலுவ லகம், குளித்தலை வட்டாட்சியர், கோட்டாட்சியர், கரூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகங்களில் பலகட்ட  போராட்டங்களையும் நடத்தியு உள்ளோம். இதனால், கடந்த 22.3.2022 அன்று  கரூர் மாவட்ட ஆட்சியரும் குளித்தலை கோட்டாட்சியரும் எங்கள்  ஊருக்கு வந்து நேரடி களஆய்வு செய்து, ஒரு மாதத்திற்குள் சாலை  அமைத்து தரப்படும் என உறுதி யளித்தனர். ஆனால், இன்றுவரை எங்கள் ஊருக்கு தார்ச்சாலை அமைத்து தரவில்லை. எங்கள் ஊருக்கு தார்ச்சாலை அமைப்பதற்காக குளித்தலை கோட்டாட்சியர், மருதூர் பேரூராட் சிக்கு தடையில்லா சான்று வழங்கிய பிறகும், நாங்கள் ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தி வரும் பாதை முழுமை அடையாத பாதை யாக உள்ளது. எங்களுக்கு தார்ச்சாலை  அமைத்து தராமல், மருதூர் பேரூ ராட்சி நிர்வாகமும், கரூர் மாவட்ட நிர்வாகமும் ஏமாற்றி வருகின்றன. தற்போது மழைக்காலம் துவங்கி விட்டதால், இந்தப் பாதை சேறும்,  சகதியுமாக காட்சியளிக்கிறது. மாணவர்கள் கல்வி நிலையங்களுக் கும், உடல்நலம் குன்றியவர்கள் மருத்துவமனைக்கும் செல்ல முடியாத  வகையில் எங்கள் ஊர் துண்டிக்கப் பட்டுள்ளது. தார்ச்சாலை அமைக்க  வலியுறுத்தி, கடந்த நான்கு ஆண்டு களில், கரூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு நிர்வாகத்திடம் 99 மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே எங்கள் ஊருக்கு உடனடி யாக தார்ச்சாலை அமைத்து கொடுக்க வலியுறுத்தி, புதிதாக பொறுப்பேற்றுள்ள கரூர் மாவட்ட ஆட்சியர் எம்.தங்கவேலிடம் நூறா வது மனுவை வழங்கினர்.   மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட  அலுவலர்களை அழைத்து, இந்த கோரிக்கைகள் மீது உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.