திருச்சிராப்பள்ளி, மே 8-
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதி களில் சிதிலமடைந்துள்ள மின் கம்பங்களை மாற்ற கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அபிஷேகபுரம் பகுதிச் செயலாளர் வேலுச்சாமி மன்னார்புரம் மின்வாரிய ஆணை யரிடம் திங்களன்று மனு அளித்தார்.
அந்த மனுவில், ‘‘திருச்சி மாநகராட் சிக்கு உட்பட்ட 62-ஆவது வார்டு பஞ்சப்பூர் பகுதி, புதுத்தெரு, ஆர்.எம்.எஸ் காலனி, அண்ணா நகர், எடமலைப்பட்டி புதூர், ராமச்சந்திரா நகர், செட்டியபட்டி, அன்பி லார் நகர், சொக்கலிங்கபுரம், படுகை, 57-ஆவது வார்டுக்குட்பட்ட எம்.ஜி.ஆர் நகர், அரசு காலனி, பிள்ளையார் கோவில் தெரு, காளியம்மன் கோவில் தெரு, முத்து மாரியம்மன் கோயில் தெரு, 58-ஆவது வார்டுக்குட்பட்ட அண்ணா நகர், சுந்தரம் பிள்ளை தோட்டம், கிராப்பட்டி, பாரதி நகர், 63 வது வார்டுக்குட்பட்ட ஐயப்ப நகர், கே.கே நகர், எல்.ஐ.சி காலனி, 64-ஆவது வார்டுக்குட்பட்ட கே.கே.நகர், உடையாம் பட்டி, இ.பி.காலனி, 59-ஆவது வார்டுக்கு உட்பட்ட காஜாமலை காலனி ஆகிய பகுதி களில் மின் கம்பங்கள் சிதிலமடைந்து எலும்புக்கூடு போல் காணப்படுகிறது. இத னால், விபத்து மற்றும் உயிர்ப்பலி ஏற்படும் அபாயமும் உள்ளது.
எனவே, இந்த மின்கம்பங்களை உட னடியாக மாற்றி விபத்து மற்றும் உயிர் பலி யை தடுக்க வேண்டும். மேலும் இப்பகுதி யில் எரியாத மின் விளக்குகளை மாற்ற வேண்டும். டிரான்ஸ்பார்மர் இல்லாத பகுதி களில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்துக் கொடுக்க வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.
மனு கொடுத்த போது, சிபிஎம் உறுப்பி னர்கள் நிர்மலா, வேம்பு, கார்த்தி, சதா சிவம், யுவசக்தி ஆகியோர் உடனிருந்தனர்.