திருவாரூர், நவ.17 - ஒன்றிய பாஜக அரசின் நாசகர கொள்கையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மக்கள் சந்திப்பு இயக்கம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதனொரு பகுதியாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, நகரப் பகுதிகளில் மக்கள் சந்திப்பு இயக்கம் கடந்த நவ.12 அன்று துவங்கியது. இந்த மக்கள் சந்திப்பு இயக்கம் ஞாயிற்றுக் கிழமை மாலை நிறைவடைந்தது. திருவாரூர் திருவாரூர் ஒன்றியத்தில் சிபிஎம் ஒன்றி யச் செயலாளர் பி.ஆர்.எஸ். சுந்தரய்யா தலைமையிலும், கொரடாச்சேரியில் ஒன்றியச் செயலாளர் கே.கோபிராஜ் தலைமையிலும், குடவாசலில் தெற்கு ஒன்றியச் செயலாளர் டி.லெனின் தலை மையிலும், குடவாசலில் வடக்கு ஒன்றியச் செயலாளர் கே.அன்பழகன் தலைமையி லும், வலங்கைமானில் ஒன்றியச் செயலாளர் டி.சண்முகம் தலைமையி லும், நீடாமங்கலத்தில் ஒன்றியச் செயலா ளர் டி.ஜான்கென்னடி தலைமையிலும் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. மக்கள் சந்திப்பு இயக்கத்தில் மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பி னர்கள், ஒன்றிய, நகர குழு உறுப்பி னர்கள், கிளைச் செயலாளர்கள் வீடு வீடாகச் சென்று துண்டறிக்கை வழங்கி வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஒரே நாடு ஒரே தேர்தல், மதவெறி, ஊழல் அரசியலுக்கு எதிராக, விலைவாசி உயர்வு, பெண் கொடுமை, தீண்டாமை வன்கொடுமைக்கு எதிராக உட்பட ஒன்றிய அரசின் பல்வேறு மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, விவசாயி கள் விரோதச் செயலைக் கண்டித்தும், அனைத்து கிராமங்களுக்கும் பேருந்து வசதியை உறுதி செய்திட, சுத்தகரிக் கப்பட்ட குடிநீர் தினமும் தடையின்றி கிடைத்திட, வீடு இல்லாதவர்களுக்கு வீடும், வீட்டு மனை பட்டாவும் வழங்கிட வலியுறுத்தி மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது.
பொன்னமராவதி
கட்சியின் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியக் குழு சார்பில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்திற்கு, ஒன்றியச் செயலாளர் என்.பக்ருதீன் தலை மையில், ஒன்றிய குழு உறுப்பி னர்கள் பேருந்து நிலையம், அண்ணா சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கினர். பாபநாசம் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் நடந்த இயக்கத்திற்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் முரளிதரன் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் காதர் ஹூசைன், ஒன்றியக் குழு உறுப்பினர் சேக் அலாவுதீன் ஆகி யோர் பேசினர்.