districts

img

இராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தில் சிபிஎம் பங்கேற்பு

இராமநாதபுரம், மார்ச் 1- மீனவர்களின் மீன்பிடித் தொழிலை பாதிக்கின்ற வகையில் தமிழக மீனவர்க ளின் படகுகள் மற்றும் மீன வர்களை இலங்கை கடற் படை சிறைப்பிடிப்பதால் மீனவர்களின் வாழ்வாதா ரம் அடியோடு அழிக்கப் படுகிறது.  மீனவர்ளுக்கு 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படு கிறது.  மீனவர்களுக்கு 50 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை அபராதம் விதிக்கப்படு கிறது. இதுவரை 38 மீன வர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 300-க்கும் மேற்ப்பட்ட படகுகள் இலங்கை துறைமுகத்தில் இலங்கை அரசால் ஏலம் விடப்படும் நிலையும் உள்ளது.  எனவே ஒன்றிய அரசு இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்களை யும், படகுகளையும் மீட்டுத் தரக் கோரி இராமேஸ் வரத்தில் மீனவர்கள் சங்கம் நடத்தும் தொடர் உண்ணா விரத போராட்டம் மீனவர் சங்கத்தலைவர் சேசுராஜா தலைமையில் நடைபெற் றது. இதில் மீனவர்கள் மற்றும் மீனவ பெண்கள் பங்கேற்றுள்ளனர். மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் க.கருணாகரன், தாலு காச் செயலாளர் ஜி.சிவா,  மாவட்டக்குழு உறுப்பினர் கள், இ.ஜஸ்டின், கே.சுமதி, தாலுகாக்குழு உறுப்பினர் கள் ஏ.அசோக், கே.மணி கண்டன், டி.மாரிமுத்து, வி. பழனிக்குமார், என்.மாரி உள்பட 800க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர்.