திருவாரூர்,செப்.26- திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை நகரப் பகுதியில் உள்ள அங்காடிகளில் அனைத்து அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடு இன்றி தவறாமல் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக முத்துப்பேட்டை நகரப் பகுதியில் உள்ள அங்காடி மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஒப்பாரி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாதர் சங்க நகர செயலாளர் ஆர்.சாந்தி, சிபிஎம் நகரக் செயலாளர் சி.செல்லத்துரை ஆகியோர் தலைமை வகித்தனர், மாதர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.பவானி, செயலாளர் பி.கோமதி,பொருளாளர் ஆர்.சுமதி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ஜோதிபாசு ஆகியோர் பேசினர். , போராட்டத்தில் முத்துப்பேட்டை ஒன்றிய செயலாளர் கே.பழனிச்சாமி, மாவட்டக்குழு உறுப்பினர் கே.வி.இராஜேந்திரன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.