மயிலாடுதுறை, நவ.4 - மயிலாடுதுறை காமராஜர் சாலையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு அலுவலக கூட்டரங்கில் (தோழர் கோ.பாரதிமோகன் நினைவகம்) மார்க்சிஸ்ட் கட்சியின் 24 ஆவது மாவட்ட மாநாடு வரவேற்புக் குழு அமைப்பு கூட்டம் திங்களன்று மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் சிறப்புரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் ஒன்றியச் செயலாளர்கள் உரையாற்றினர். நவம்பர் 29 மற்றும் 30 ஆகிய இரு தினங்கள் மயிலாடுதுறையில் நடைபெறவுள்ள மாவட்ட மாநாட்டிற்கான வரவேற்புக் குழு அமைப்பு கூட்டத்தில் 103 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக டி.துரைக்கண்ணு, செயலாளராக டி.ஜி.ரவி, பொருளாளராக சி.மேகநாதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில் மாவட்டக் குழு, ஒன்றியக் குழு, கிளைச் செயலாளர்கள், வர்க்க, வெகுஜன அரங்க பொறுப்பாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.