districts

img

சிபிஎம் கரூர் மாவட்ட மாநாடு வரவேற்பு குழு அமைப்பு

கரூர், அக்.15 - மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட 10 ஆவது மாநாட் டின் வரவேற்பு குழு அமைப்பு கூட்டம் திங்கள் கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு கரூர் மாநகரச் செயலாளர் எம். தண்டபாணி தலைமை வகித்தார். மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா வரவேற்பு குழு கூட்டத்தை அமைத்து சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஜீவா னந்தம் ஆகியோர் வரவேற்பு குழு கூட்ட பணிகள் குறித்து பேசினர். இதில் மாவட்ட செயற்குழு, மாவட்ட குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கரூர் மாவட்ட 10 ஆவது மாநாடு நவம்பர் 18, 19 ஆம் தேதிகளில் கரூர் நகரத்தில் இரண்டு நாள் நடைபெற உள்ளது. முதல்  நாள் பேரணி, பொதுக்கூட்டம், 2 ஆவது நாள்  ஸ்தாபன மாநாடு என நடக்கிறது. மாநாட் டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமு வேல்ராஜ், மாநிலக் குழு உறுப்பினர்கள் ராதிகா, எஸ்.பாலா, மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு ஆகியோர் கலந்து கொள் கின்றனர். 150 பேர் கொண்ட செந்தொண் டர்கள் பேரணியில் பங்கேற்க உள்ளனர்.