districts

img

பட்டியல் வகுப்பு மக்களுக்கு வழிபாட்டு உரிமை வழங்குக!

அரியலூர், அக்.4- புதுக்குடி அய்யனார் கோவில் பட்டியல் வகுப்பு  மக்களுக்கு வழிபாட்டு உரி மையை வழங்க அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும்  என வலியுறுத்தப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம்  ஆண்டிமடம் ஒன்றியத்திற் குட்பட்ட வடக்கு புதுக்குடி கிராமத்தில் உள்ளது அய்ய னார்கோவில். இக்கோவி லில் பட்டியல் வகுப்பு மக்கள் பல தலைமுறையாக வழிபாடு நடத்தி வந்த னர். இந்நிலையில், இக் கோவிலில் சமீபத்தில் குட முழுக்கு விழா நடைபெற் றது. அச்சமயத்திலிருந்து, ‘ஏற்கனவே வழிபட்டு வந்த  பட்டியல் வகுப்பு மக்க ளுக்கு, வழிபாட்டு உரிமையை தர முடியாது’ என்று அக்கிராமத்தில் உள்ள மற்றொரு சமூகத்தி னர் தடுத்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பட்டியல் வகுப்பு மக்கள் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கோட்டாட் சியர் ஆகியோரிடம் தொ டர்ந்து மனு கொடுத்தும், எந்த  நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்நிலையில் கங்கை கொண்ட சோழபுரத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் ஒன்றியச் செயலா ளர் எம்.வெங்கடாசலம், ஆண்டிமடம் வட்டச் செயலா ளர் பரமசிவம் ஆகியோர்  தலைமையில் நடை பெற்றது. இதில் தமிழ்நாடு  தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் சாமுவேல் ராஜ் பங்கேற்று சிறப்புரை யாற்றினார். மாவட்டச் செயலாளர் இளங்கோவன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் அருணாசலம், மாவட்ட செயற்குழு மற்றும்  ஒன்றியக் குழு உறுப்பி னர்கள், அய்யனார் கோவில் வழிபாட்டு உறவுகளின் ஒருங்கிணைப்பாளர் வெங்க டேசன் உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர். கூட்டத்தில், இந்த கோவி லுக்கு சொந்தமான வர்களுக்கு வழிபாட்டு உரி மையை வழங்க வேண்டும். இதில் தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுத்து, பல தலைமுறைகளாக வழிபட்டு வந்த பட்டியல் வகுப்பு மக்கள் வழிபடுவதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.