திருச்சிராப்பள்ளி, செப்.24 - புதிதாக கட்டடம் கட்டுவதற்கான அனுமதி கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வை திரும்பப் பெற வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருச்சி மாநகர் மாவட்டச் செய லாளர் ஆர்.ராஜா வலியுறுத்தி யுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதிதாக வீடு கட்டுவதற்கான கட்டட அனு மதியை, ஒற்றை சாரள முறையில் இணை யம் (ஆன்-லைன்) மூலமாக பல விதமான கட்டணங்களை ஒன்றிணைத்து கட்டட அனு மதி வழங்கியுள்ளது தமிழக அரசு. அரசின் இந்த புதிய முறையால் திடீரென மூன்று மடங்கு (300 சதவீதம்) கட்டண உயர்வு ஏற் பட்டுள்ளது. இது ஏற்புடையதல்ல. தற்போதைய நடைமுறைப்படி 1488 சதுர அடி கொண்ட, இரண்டு தளம் கொண்ட வீட்டிற்கு பெறப்படும் மாநகராட்சி கட்டட அனுமதி கட்டணம், தண்ணீர் தொட்டி வைக்க ரூ.225, ஆழ்துளைக் கிணறு அமைக்க ரூ.650, விளம்பரப் பலகை வைக்க ரூ.1500, மனை அங்கீகரிக்க ரூ.1625, மழை நீர் சேகரிப்பு முன்வைப்பு ரூ.2500, கட்டிட உரி மையாணை கட்டணம் ரூ.7500, பொருள் சேகரிப்பு கட்டணம் ரூ.4750, வைப்புத் தொகை ரூ.10425, பாதாளச் சாக்கடை முன்வைப்புத் தொகை ரூ.12,500 என கட்டட அனுமதி பெற மொத்தம் ரூ.41,675 இது வரையில் நடைமுறையில் இருந்தது. இந்நிலையில் நகராட்சி நிர்வாகத் துறை தமிழகத்தில் எல்லா மாநகராட்சிகளுக்கும் ஒரேயடியாக மூன்று மடங்கு கட்ட ணம் உயர்த்தி உள்ளது. மேற்படி திருச்சி மாநகராட்சியில் அனைத்து விதமான கட்டணங்களையும் இணைத்து ஒரே கட்டணமாக, தற்போது ஒற்றை சாளர முறையில் இணைய வழியாக (ஆன்-லைன்) விண்ணபிக்க சதுர அடிக்கு 84 ரூபாய் வீதம், 325 சதுர அடி முதல் 3400 சதுர அடி வரை வசூலிக்கப் படுகிறது. அவ்வாறு வசூலிக்கும் தொகை உதாரணமாக 1488 சதுர அடி கொண்ட இரண்டு தள வீட்டிற்கு 84 X 1,488 என்றால், தற்போதைய புதிய கட்டணம் 1,24,992 ரூபா யாகும். தமிழக அரசு ஏற்கனவே கடுமையாக உயர்த்திய வீட்டு வரி உள்ளிட்டவற்றால், மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், இது போன்று மூன்று மடங்கு கட்டண உயர்வால் புதிதாக கட்டடம் கட்டும் ஏழை, எளிய, நடுத்தர மக்களும், கட்டட ஒப்பந்ததா ரர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே ஒற்றை சாளர முறையில் இணைய வழியில் (ஆன்-லைனில்) 325 சதுர அடி முதல் 3500 சதுர அடி வரை ரூ.30 பெற்று கொண்டு கட்டட அனுமதியை வழங்கிட வேண்டும். உயர்த்திய ஒருங்கிணைந்த புதிய கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும் என திருச்சி மாநகராட்சியையும், தமிழக அரசை யும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.