districts

img

திருச்சியில் சிபிஎம் பொதுக்கூட்டம்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 21 - திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அர சியல் விளக்க பொதுக்கூட்டம் புதனன்று மணப்பாறை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, கட்சியின் மணப்பாறை வட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பி னர் கண்ணன், வட்டக்குழு உறுப்பினர் சீனி வாசன் ஆகியோர் பேசினர்.  மாவட்டச்  செயற்குழு உறுப்பினர் சிதம்பரம், மாநிலக் குழு உறுப்பினரும் கந்தர்வக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினருமான சின்னத்துரை ஆகி யோர் அரசியல் விளக்கவுரை ஆற்றினர். முன்னதாக சுரேஷ் வரவேற்றார். வட்டக்குழு  உறுப்பினர் சீனிவாசன் நன்றி கூறினார்.