நாகப்பட்டினம், அக்.8 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் கிழக்கு ஒன்றிய இடைக்கமிட்டி மாநாடு காமேஸ்வரம் ஊராட்சியில் நடைபெற்றது. சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் எம்.முரு கையன் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் வி.சுப்பிரமணியன் நிறை வுரையாற்றினார். 11 பேர் கொண்ட புதிய ஒன்றியக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. கீழையூர் கிழக்கு புதிய ஒன்றியச் செயலாளராக எம்.அப்துல் அஜீஸ் தேர்ந் தெடுக்கப்பட்டார். முன்னதாக நடைபெற்ற கிளை மாநாடுகளில், திருப் பூண்டி ஏ கிளை எம்.மணி கண்டன், பி கிளை எம். அப்துல் முத்தலிப், சிந்தா மணி எம்.வேலாயுதம், கார பிடாகை ஜி.பாஸ்கர், சடை யன் கோட்டகம் என்.செல்வ குமார், பிஆர்புரம் ஏ கிளை ஜி.சுப்பிரமணியன், பி கிளை எம்.நடராஜன், காமேஸ்வரம் த.ரவிச்சந்திரன், வேட்டைக் காரணிருப்பு எஸ்.ரவிச் சந்திரன், வேளாங்கண்ணி எம்.செல்வம் ஆகியோர் கிளைச் செயலாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.