கோவை, பிப். 8- தென்னிந்திய மாநிலங்க ளுக்கு குறிப்பாக எதிர்க்கட்சி கள் ஆட்சி செய்யும் மாநிலங்க ளில் நிதி ஒதுக்குவதில் பாரபட்சம், மாநில உரிமை பறிப்பு மற்றும் கூட்டாட்சிக்கு எதிராக செயல்ப டும் ஒன்றிய மோடி அரசைக் கண் டித்து தமிழகம் முழுவதும் மார்க் சிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்த போராட்டம் பேரெழுச்சியுடன் நடைபெற்றுள்ளது. இதன் ஒரு பகுதியாக கோவை, ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இந்தியா கூட்டணியின் அங்கம் வகிக்கும் தோழமை கட்சிகள் பெருந்திரளாய் பங்கேற்றனர். மோடி தலைமையிலான ஒன்றிய அரசு மாநில உரிமைகள் மீது நடத்தி வரும் தொடர் தாக் குதல், எதிர்க்கட்சிகள் ஆளும் தமிழ்நாடு, கேரளம், மேற்குவங் கம், டெல்லி உள்ளிட்ட பல மாநி லங்களுக்கு நிதி ஒதுக்காமல் பாரபட்சம் காட்டுவது, சட்டப்பே ரவையில் இயற்றப்படும் மசோ தாக்களுக்கு ஒப்புதல் அளிக்கா மல் ஆளுநர்களை வைத்து அடா வடியாக மறுப்பது, அரசியல் சாசன விழுமியங்களை காலில் போட்டு மிதிப்பது, கூட்டாட்சி தத் துவத்தை சிதைப்பது என ஒன்றிய பாஜக அரசு சர்வாதிகாரத் திமி ரோடு நடந்து கொள்கிறது. இத னைக்கண்டித்து கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன் தலை மையில் வியாழனன்று தலைநகர் டெல்லியில் மாபெரும் போராட் டத்தை நடத்தியது. இப்போராட் டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்க உரத்து முழக்கமி டுவது என்கிற அடிப்படையில், தமிழகத்தில் இந்தியா கூட்டணி யில் அங்கம் வகிக்கும் கட்சிகள் பங்கேற்பது என்கிற அடிப்படை யில், இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மோடி அரசின் ஏதேசதி காரச் செயலை கண்டித்து கோவை, ஈரோடு, நீலகிரி மாவட் டங்களில் பெருந்திரள் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.
கோவை சிவானந்தகாலனி யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன் தலைமை ஏற்றார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஏ.ராதிகா ஆர்ப் பாட்டத்தை துவக்கிவைத்தார். இதில் திமுக மாவட்டச் செயலா ளர்கள் நா. கார்த்திக், தொண்டா முத்தூர் ரவி, தளபதி முருகே சன், காங்கிரஸ் கட்சியின் கருப்பு சாமி மற்றும் காயத்திரி, மற்றும் தந்தை பெரியார் திராவிட கழகத் தில் பொதுச் செயலாளர் கு.ராம கிருஷ்ணன் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத் தைகள் சுசி.கலையரசன் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தனபால், மதிமுக நிர்வாகி ஆடிட் டர் அர்ஜுன் உள்ளிட்ட தலைவர் கள் உரையாற்றினர். இதேபோன்று, பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க் சிஸ்ட் கட்சியின் தாலுகாக் குழு உறுப்பினர் மகாலிங்கம் தலைமை வகித்தார். மேலும், கட்சியின் மாவட்டச் செயற் குழு உறுப்பினர் வி.ஆர்.பழனிச் சாமி, தாலுகா செயலாளர் எம். அன்பரசன் திமுக சார்பில் பொள் ளாச்சி நகரச் செயலாளர் நவநீத கிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் பகவதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் சண்முகம், விசிக சார்பில் மண்டலச் செயலா ளர் ச.பிரபு, தபெதிக நகரச் செய லாளர் மனோகரன் உள்ளிட்ட திர ளானோர் கலந்து கொண்டனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் ஆர்ப் பாட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் ஆர். ரகுராமன் தலைமை வகித்தார். காங்கிரஸ் கட்சியின் தலைவர்க ளில் ஒருவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பின ருமான ஈவிகேஎஸ்.இளங்கோ வன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு மாவட்டச் செய லாளர் எஸ்.டி.பிரபாகரன், மாநி லக்குழு உறுப்பினர் டி.ஏ.மா தேஸ்வரன், காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்டப் பொறுப்பாளர் திருச்செல்வம், ஆம் ஆத்மி பொறுப்பாளர் ஞானமூர்த்தி, தழிழக வாழ்வுரிமை கட்சி சார் பில் கே.சீனிவாசன், ஜார்ஜ் பெர் ணான்டஸ், திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் சண்மு கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
உதகை
இதேபோன்று, நீலகிரி மாவட் டம் உதகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எல்.சங்க ரலிங்கம் தலைமையில் ஏடிசி திடல் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்தை உதகை சிபிஎம் தாலுகாச் செயலா ளர் நவீன்சந்திரன் துவக்கி வைத் தார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலா ளர் பாமு முபாரக், விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்டச் செயலாளர் புவனேஸ்வரன், திமுக மாவட்டத் துணைச் செய லாளர் ரவிக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் பணிக்குழு செயலாளர் கட்டாரி, மற்றும் இந்திய கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியின் தலைவர்கள் மணிகண்டன், கே. சுந்தரம், எஸ்.ராஜரத்தினம், எஸ். புட்டுசாமி, கிருஷ்ணன், அடையா ளகுட்டன், ஜார்ஜ் மற்றும் உதகை நகர் மன்றத் தலைவர் வாணிஸ் வரி உள்ளிட்ட திரளானோர் பங் கேற்று ஒன்றிய அரசுக்கு எதி ராக முழக்கங்களை எழுப்பினர். முடிவில், கே.மகேஷ் நன்றி கூறி னார்.