districts

img

மனைப் பட்டாவுக்கு இடம் அளந்து தரக் கேட்டு சிபிஎம் உண்ணாவிரதம் - மறியல்

அரியலூர், அக்.19 - அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் அருகே சின்னவளை யம் பேருந்து நிறுத்தத்தில் 6  ஆவது வார்டு பட்டியலின மக்க ளுக்கு வீட்டுமனைப் பட்டா கேட்டு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இதற்கு கை நெசவுத் தொழிலா ளர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ். என்.துரைராஜ் தலைமை வகித் தார். உண்ணாவிரதத்தினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  ஒன்றியச் செயலாளர் வெங்கடா சலம் தொடங்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் எம்.இளங் கோவன், தமிழ்நாடு விவசாயிகள்  சங்க மாவட்டச் செயலாளர் ஆர். மணிவேல் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். உண்ணாவிரதத்தில் மாவட்டக் குழு மற்றும் ஒன்றிய குழு  உறுப்பினர்கள் கண்டன உரை யாற்றினர்.  போராட்டத்தில் சின்னவளை யம் கிராமத்தைச் சேர்ந்த பட்டிய லின மக்களுக்கு கடந்த 20.6.2007 அன்று அரசு வழங்கிய இலவச வீட்டு மனைப் பட்டாவின் இடத்தினை கண்டுபிடித்து அளந்து கொடுக்க வேண்டும். சின்ன வளையத்தில் உள்ள மயானத் திற்கு மின்சார வசதி செய்து  கொடுக்க வேண்டும். ஜெயங் கொண்டம் நகராட்சியில் நூறுநாள் வேலை வழங்கிட வேண்டும். ஜெயங்கொண்டம் அருகே சின்னவளையம், பெரியவளையம் பகுதி சாலைகளில் சாலை ஓரங்க ளிலும், தனியார் விலை நிலங்களி லும் கொட்டப்படும் காலாவதி யான மருந்து, மாத்திரைகள், ஊசி மருந்துகள் உள்ளிட்டவற்றை கொட்டி சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தும் நபர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பன  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்நிலையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராததால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் மற்றும் பொதுமக்கள் சாலை  மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். அப்போது போலீசாருக்கும் கட்சியின் மாவட்டச் செயலாளர் கையை போலீசார் இழுத்ததில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.  சின்னவளையம் வடக்குத்தெரு ஆறாவது வார்டை சேர்ந்த சாமிதுரை என்பவரது மனைவி கலைச்செல்வி (65) திடீ ரென மயங்கி விழுந்தார். இதை யடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம்  அவர் ஜெயங்கொண்டம் அரசு  மருத்துவமனைக்கு சிகிச்சைக் காக அனுப்பி வைக்கப்பட்டு அங்கு  அவர் சிகிச்சை பெற்று வருகிறார். பின்னர், ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் ராஜா, உதவி  ஆய்வாளர் நந்தகுமார், லோக நாதன் உள்ளிட்ட போலீசார் மற்றும் மண்டல துணை வட்டாட்சியர் பொன்பகவதி ராஜ், வருவாய் ஆய்வாளர் செல்வராஜ், கிராம நிர்வாக அலுவலர் நீலமேகம் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில்,  திங்கட்கிழமை வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரி வித்ததன்பேரில், உண்ணாவி ரதத்தை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர். 8 பேர் மீது வழக்குப் பதிவு இந்நிலையில், ஜெயங் கொண்டம் போலீசார், கை நெசவு தொழிலாளர் சங்க மாவட்டச் செய லாளர் துரைராஜ், ஒன்றியச் செய லாளர் வெங்கடாச்சலம், மாவட்டக்  குழு உறுப்பினர் தியாகராஜன், பத்மாவதி, கோவிந்தராஜ், மீனா, ரவீந்திரன் உட்பட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.