districts

img

கரூரில் சிபிஎம் தேர்தல் நிதி வசூல்

கரூர், ஜன.28 - ஏழை, எளிய மக்களுக்காகவும், தொழி லாளர்களுக்காகவும், அவர்களது உரிமை களையும் பாதுகாத்திட மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. கட்சியின் கரூர் மாநகரக் குழு சார்பில், கட்சி வளர்ச்சி நிதி மற்றும் தேர்தல் நிதி வசூல்  நடைபெற்றது. 41 ஆவது வார்டில் மாநகர கவுன்சிலர் எம்.தண்டபாணி தலைமையில் நடைபெற்ற வசூலை, கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா, மாவட்டச் செய லாளர் மா.ஜோதிபாசு ஆகியோர் துவக்கி வைத்தனர்.  மாவட்டக் குழு உறுப்பினர்கள், காந்தி கிராமம் கிளைச் செயலாளர் சி.செல்லதுரை,  அசோக் நகர் கிளைச் செயலாளர் சதீஷ் உட்பட 22 பேர் கலந்து கொண்டனர். இதில் ரூ.51,640 வசூலானது.