கடலூர், நவ.28- சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நேர்மையான துணைவேந்தரை நியமிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டக்குழு வலி யுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் முதல்வ ருக்கு அனுப்பியுள்ள கடிதம் வரு மாறு: அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் ஆர்.கதி ரேசன் பதவிக்காலம் நவ.23அன்றோடு முடிந்துவிட்டது. இந்நிலையில் அவரது பதவிக் காலத்தை நீட்டிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாகவும், ஆர்எஸ்எஸ் மூலம் ஆளுநர் ஆர்.என்.ரவி தயவால் தன்னுடைய பதவிக் காலத்தை நீட்டிக்கும் தீவிர முயற்சியில் இருக்கிறார் என பல்கலைக் கழக வட்டாரத்தில்செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. ஆர்.கதிரேசன் துணை வேந்தராக நியமிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை பல்கலைக் கழகத்தின் வளர்ச்சிக்கு என எந்த விதமான பணிகளையும் மேற்கொள்ளாத நபராக அவர் இருந்துள்ளார். இந்த பல்கலைக்கழகம் இந்திய அளவில் புகழ்பெற்ற பழமை வாய்ந்த பல்கலைக்கழகமாகும். இப்பல்கலைக்கழகம் 2013 ஆம் ஆண்டு நிதிச்சிக்கலில் எழுந்த போராட்டங்களால் அரசுடமை யாக்கப்பட்டது. அரசுடைமை ஆக்கப்பட்டபின் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து பணியாற்றி வருகின்ற எண்ணற்ற தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி பணியாளர்கள் இன்று வரை பணிநிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர். அவர்களுக்கான கோ ரிக்கைகளுக்காக இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தற்போது துணைவேந்தராக இருக்கும்ஆர்.கதிரேசன் தன்னுடைய 3 ஆண்டு கால பதவிக்காலத்தில் பல்கலைக் கழக வளர்ச்சிக்கோ, மாண வர்கள், ஊழியர்களின் வளர்ச்சிக்கோ எவ்வித பங்களிப்பையும் செலுத்த வில்லை. துறைத்தலைவர், புல முதல்வர் கண்காணிப்பாளர்கள், துறைகளின் இயக்குநர்கள் என பல்கலைக்கழக நிர்வாகத்தில் உள்ள உயர் பொறுப்புகளில் நியாயமான முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டியவர்களுக்கு வழங்காமல் தனக்கு தேவையானவர்களுக்கு மட்டுமே வழங்கி வந்துள்ளார், நியமனப் பொறுப்புகள் எதிலும் அவர் எவ்விதமான நிர்வாக வழி காட்டல்களையும் பின் பற்றா மல் தான்தோன்றித்தனமாக செயல்பட்டுள்ளார். பல்கலைக் கழகத்தில் மாணவர்சேர்க்கை ஆண்டு தோறும் 10விழுக்காடு குறைந்து கொண்டே வருகிறது. ஆராய்ச்சி திட்டங்கள் மற்றும் பணிகள் கருத்தரங்குகள், பயிற்சி பட்டறைகள் என அனைத்து விதமான கல்வி மற்றும் ஆய்வு சார்ந்த பணிகளும் கடந்த 3 ஆண்டுகளில் பெரும் தேக்க நிலையில் உள்ளது. மாணவர்களுக்கான வளாக வேலைவாய்ப்பு தேர்வுகளும் போதிய விகிதாச்சாரத்தில் இல்லை. பல துறை களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக கற்பித்தல்பணி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. துறைசார்ந்த ஆசிரியர்களுக்கு பதிலாக வேறு துறை ஆசிரியர்கள் கற்பிக்கும் முறை நீடிக்கிறது. பல்கலைக்கழக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொலைதூரக் கல்வி இயக்கம் நாளுக்கு நாள் சீரழிந்து மாணவர் எண்ணிக்கை குறைந்த வண்ணம் உள்ளது. எனவே இந்த பல்கலைக் கழகத்தில் வளர்ச்சியை கருத்தில்கொண்டு தமிழக அரசு புதிய நேர்மையான துணைவேந்தரை நியமிக்க வேண்டுமெனவும் ஆர்.கதிரேசனின் பணிக்காலம் எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்படக்கூடாது. இவரது பதவிக்காலத்தில் நடை பெற்ற முறை கேடுகளை நீதி விசாரணைக்கு உட்படுத்தி உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.