கரூர், ஆக.20 -
நகர்ப்புற உள்ளாட்சி உறுப்பினர்களுக்கு அரசு அறிவித்துள்ள தொகுப்பு ஊதியத்திலிருந்து ஒரு பகுதியை அவரவர்கள் அங்கம் வகிக்கும் கட்சியின் இடைகமிட்டிக்கு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு முடிவு செய்துள்ளது.
இதைத் தொடர்ந்து, கட்சியின் கரூர் மாநக ராட்சியின் 41வது வார்டு கவுன்சிலர் எம்.தண்டபாணி தனது முதல் மாத தொகுப்பு ஊதியத்திலிருந்து கட்சிக்கு செலுத்த வேண்டிய ஈவுத் தொகையினை மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா-விடம் வழங்கினார். இதில் மாவட்டச் செயலாளர் மா. ஜோதிபாசு, மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.