districts

வழக்கறிஞர்கள் சங்கத் தலைவருக்கு சிபிஎம் வாழ்த்து

கும்பகோணம், ஏப்.30-

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யோடு இணைந்து பல்வேறு மக்கள் போராட் டங்களில் கலந்துகொண்டு மக்கள் உரிமைக் காக போராடிய விடுதலை சிறுத்தைகள் கட்சி  மண்டலச் செயலாளரும் வழக்கறிஞருமான சா.விவேகானந்தன், கும்பகோணம் வழக்கறிஞர் சங்கத் தேர்தலில்  தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

   அவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் தஞ்சாவூர் மாவட்டச் செயற்குழு  உறுப்பினர் ஆர்.மனோகரன், சிஐடியு மாவட்டத் தலைவர் கண்ணன், கும்பகோ ணம் மாநகர்  செயலாளர் செந்தில்குமார், பழ. அன்புமணி ஆகியோர் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.