நாகப்பட்டினம், அக்.31 - பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலை கண்டித்து நாகப்பட்டினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் கொடூரமானத் தாக்கு தலை கண்டித்தும், ஒன்றிய பாஜக மோடி அரசின் மதவெறி, வெறுப்பு அரசியலையும், கார்ப்பரேட் நிறுவனங் களுக்கு ஆதரவாக செயல்படுவதை எதிர்த்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாகப்பட்டினம் மாவட்டத்தின் பல்வேறு இடங்க ளில் தெருமுனைப் பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது. தலைஞாயிறு கடைத்தெருவில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து, ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா, நாகூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கூட்டத் தில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பி னர் நாகைமாலி, நாகை நகரச் செய லாளர் க.வெங்கடேசன், கீழ்வேளூர் கடைத்தெரு மற்றும் சிக்கல் கடைத் தெரு பகுதியில் மாவட்ட செயற் குழு உறுப்பினர் ப.சுபாஷ் சந்திர போஸ், கீழ்வேளூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் என்.எம்.அபுபக்கர், நாகை வடக்கு ஒன்றியச் செயலாளர் வி.வி.ராஜா உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.