கும்பகோணம் ஒன்றியத்தில் சிபிஎம் கிளை புதிய மாநாடுகள்
கும்பகோணம், அக்.21- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஒன்றியம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது ஒன்றிய மாநாட்டை யொட்டி கிளை மாநாடுகள் நடைபெற்றன. மாநாட்டில், தேவனாஞ்சேரி - பன்னீர்செல்வம், திரு நல்லூர் - மதிவாணன், கொத்தங்குடி - அய்யப்பன், திருப்புறம் பியம் - செல்வராஜ், குடிதாங்கி -கனகராஜ், இன்னம்பூர் - கணே சன், பாபராஜபுரம் - கலியமூர்த்தி, சுந்தரபெருமாள் கோவில் - பெரியசாமி, அணைக்குடி - தங்கையன், சாத்தங்குடி - ஞானபிரகாசம், பறட்டை - நடேசன், வாழபுரம் - ராஜகுமார், கடிச்சம்பாடி - ரவிச்சந்திரன், கள்ளப்புலியூர் - ஜோதிபாசு, சோழபுரம் - செல்வமணி, உத்தமதானி - ரத்தினம், கழுக்காணி வட்டம் - கீதா, பதினோரு வேலி - கலியமூர்த்தி, மருதா நல்லூர் - ராமச்சந்திரன், தட்டுமால் -சாமிநாதன், முலையூர் - தாமோதரன், புளியம்பாடி - மதன், ஏரகாரம் - தமிழ் இனியன் ஆகியோர் சிபிஎம் கட்சியின் கிளை செயலாள ராக தேர்வு செய்யப்பட்டனர். மாநாடுகளில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருளரசன், மாவட்ட குழு உறுப்பினர் நாகராஜன், ஒன்றிய செயலாளர் கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட னர். செவ்வாய்க்கிழமை திருநல்லூரில் சிபிஎம் கட்சியின் கும்பகோணம் ஒன்றிய மாநாடு நடைபெறுகிறது.
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
புதுக்கோட்டை, அக்.21- புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புர வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் புதுக்கோட்டையில் நடைபெற உள்ளது. 26 (சனிக்கிழமையன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை புதுக்கோட்டை பிரக தாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இம்முகாம் நடைபெற உள்ளது. தொழில்துறை சேவைத்துறை போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த 100-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தகுதியுள்ள நபர் களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர்.