districts

img

சிபிஎம் அகில இந்திய மாநாடு குமரியில் விளம்பரப் பணிகள் தீவிரம்

நாகர்கோவில், ஜன.17- சிபிஎம் அகில இந்திய மாநாடு மதுரையில்  ஏப்ரல் 2-6 இல் நடைபெற உள்ளது. அதற்கான  ஏற்பாடுகளை கட்சியின் குமரி மாவட்ட உறுப்பினர்கள் தீவிரமாக செய்து வருகின்ற னர். சிபிஎம் அகில இந்திய 24 ஆவது மாநாட் டி்ற்கு அனைத்து மாவட்டங்களிலும் கட்சியி னர் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வரு கின்றனர். கட்சியின் குமரி மாவட்டச் செயலாளர்  ஆர்.செல்லசுவாமி தலைமையில் மாநாட்டிற் கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கட்சியினருடன் ஆலோசனைக் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் நடக்கிறது. இதில் தற்போது நாகர்கோவில் மாநகரக் குழு சார்பில் நகரெங்கும் அகில  இந்திய மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும்  வகையில் சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டு  வருகின்றன. குறிப்பாக மக்கள் பார்வை யில் படும் பகுதியில் மிகப் பிரம்மாண்ட மான முறையில் சுவர் விளம்பரங்கள் எழுதப் படுகின்றனர். இப்பணிகளை மாநகரக் குழு செய லாளர் எஸ்.அருணாச்சலம், மாநகர நிர்வாகி கள் மோகன், மனோகர ஜஸ்டஸ் உள்ளிட்ட  நிர்வாகிகள் நேரடி பார்வையில் மேற்கொள் கின்றனர்.