திருநெல்வேலி, மார்ச் 9- மதுரையில் ஏப்ரல் 2 முதல் 6 வரை நடைபெறும் சிபிஎம் 24 ஆவது அகில இந்திய மாநாட்டு நிதியாக பாளையங் கோட்டை பகுதிக்குழு சார்பில் முதல் தவணையாக ரூ. 2 லட்சம் மாநிலசெயற்குழு உறுப்பினர் கனகராஜிடம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநிலக் குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன், மாவட்டச் செயலாளர் ஸ்ரீ ராம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். மோகன் , பாளையங்கோட்டை தாலுகா செயலாளர் ஆர்.மதுபால், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கு.பழனி, 55ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் முத்து சுப்பிரமணியன், பாளையங்கோட்டை கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.