மதுரை, ஜூலை 13-
அனைத்துச் சாதியினரும் கோயி லுக்குள் செல்ல உரிமை உண்டு. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், கோயிலுக்குள் அனைத்து தரப்பின ரும் சுவாமி தரிசனம் செய்வதை உறுதி செய்ய வேண்டும். தீண்டாமை செயலை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்று உயர்நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம் மங்கலநாடு வடக்கு கிராமத்தைச் சேர்ந்த எம். மதிமுருகன் என்பவர் உயர்நீதி மன்ற மதுரைக்கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில், “எங்களது கிராமத்தில் மங்கல நாயகி அம்மன் கோயில் உள் ளது. நான் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் இக்கோயிலுக் குள் உள்ளே சென்று சுவாமி தரி சனம் செய்ய எனக்கு அனுமதி மறுக் கின்றனர்.
அதேபோல் இக்கோயில் திரு விழா உட்பட அனைத்து நிகழ்ச்சிகளி லும் நான் மட்டுமன்றி பட்டியல் இன மக்களைக் கோயிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்ய தடை விதித் துள்ளனர். எனவே, பட்டியலின மக் கள் அக்கோயிலுக்குள் சென்று வழி படவும், திருவிழாவில் பங்கேற்கவும் அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதி பதி பி.டி.ஆஷா முன்பு புதனன்று நடைபெற்றது.
அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு தினம் கொண்டாடப்பட்டு வரும் இந்த வேளையில், பட்டியல் இன மக்களை கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுப்பது தலைகுனிய வேண்டிய விஷயம்.
அனைத்து சாதியினரும் கோயி லுக்குள் செல்லவும், சுவாமி தரிசனம் செய்யவும் உரிமை உண்டு. இந்த வழக்கில் மனுதாரர் பட்டியலி னத்தை சேர்ந்தவர் என்பதால் அவ ரையும், அவர் சார்ந்த சமுதாயத்தின ரையும் கோயிலுக்குள் சுவாமி தரி சனம் செய்ய அனுமதி மறுத்துள்ள னர்.
பிறப்பால் ஒருவர் தங்களை உயர்ந்தவராகவும் மற்றவரை தாழ்ந்தவராகவும் நினைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது போன்ற தீண்டாமை செயலை, இந்த நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.
கடந்த 2021 இல் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் அனைத்து சமுதாயத்தினர் கலந்து கொண்ட சமாதானக்கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில் எடுக்கப் பட்ட முடிவை கண்டிப்பாக அனை வரும் கடைப்பிடிக்க வேண்டும். மேலும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், கோயிலுக்குள் அனைத்து தரப்பினரும் சுவாமி தரிசனம் செய் வதை உறுதி செய்ய வேண்டும். அதில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட் டால் அறந்தாங்கி கோட்ட வட்டாட்சி யர் உரிய நடவடிக்கை எடுக்கலாம்.
மேலும் சட்டம் ஒழுங்கு பிரச் சனை ஏதேனும் நிகழ்ந்தால், சம் பந்தப்பட்டவர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் காவல் துறையினர் வழக்கு பதிந்து கைது செய்யலாம் என்று உத்தரவிட்டார்.