நாகப்பட்டினம், ஆக.17-
கிராமங்கள் வளர்ச்சி அடைந் தால்தான் அந் நாட்டின் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும் என்று கிராம சபைக் கூட்டத்தில் ஆட்சியர் பேசி னார்.
நாகப்பட்டினம் அருகே உள்ள குறிச்சி ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி கிராம சபைக் கூட்டம் ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடை பெற்றது. கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினருமான நாகை மாலி, கூடுதல் ஆட்சியர் ரஞ்சித் சிங், ஊராட்சிகளில் உதவி இயக்குனர் (பொ) மோகனசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஆட்சியர் பேசிய தாவது:
கிராமங்கள் வளர்ச்சி அடைந்தால் தான், நாடு வளர்ச்சி அடையும். அதன் அடிப்படையில் கிராம சபைக் கூட்டங்கள் வாயி லாக அந்தந்த கிராமங்களில் வசிக் கும் மக்களின் கருத்தறிந்து அதன டிப்படையில் திட்டங்கள் உறுதி செய்யப்பட்டு, ஒப்புதல் பெறப்படு கிறது.
இந்தக் கூட்டத்தின் முக்கிய நோக்கம் நமக்குத் தேவையான திட்டங்கள் என்ன என்பதை முத லில்மக்களாகிய நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இந்தக் கூட் டத்தைப் பொறுத்தவரை மக்களே மக்களுக்கு தேவையான விஷ யங்களை தலைவர் மற்றும் உறுப்பி னர்கள் மூலமாக செயல்படுத்திக் கொள்வதற்கு ஒரு சிறந்த வாய்ப்பு.
மேலும் மாணவ-மாணவிகள் கல்வி இடைநிற்றலை தவிர்த்து உயர்கல்வி, கல்லூரி, போட்டித் தேர்வு மற்றும் பயிற்சிகள் என அனைத்திலும் முன்வரவேண்டும் என்றார்.
முன்னதாக குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவர் ஜான்சிராணி சிந்தா துரை வரவேற்றார். சுகாதார பணி கள் இணை இயக்குனர் ஜோஸ்பின் அமுதா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரேவதி, கண் ணன் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.
கீழ்வேளூர்-பட்டமங்கலம்
கீழ்வேளூர் ஒன்றியம் பட்டமங்க லம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக மாற்றித்தர வேண்டும். கருகிய பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை பட்டமங்கலம் ஊராட்சி மன்றத் தலை வர் மல்லிகா ரவிச்சந்திரன், கிராம சபை கூட்ட மேற்பார்வையாளர் கீர்த் தனா ஆகியோரிடம் பட்டமங்கலம் விவசாயிகள் வழங்கினர்.