மயிலாடுதுறை ஜூன் 27- மயிலாடுதுறையில் தியாகி நாராயண சாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து போதைப்பொ ருட்கள் மற்றும் கள்ளச்சாராயம் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் ஆட்சியர் பேசுகையில், மயி லாடுதுறை மாவட்டத்தில் உள்ள நகர, கிராம ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் தங்கள் பகுதிகளில் நடை பெறும் கள்ளசாராயம், கஞ்சா, குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல் பட்டு வரும் கட்டுப்பாட்டு அறை தொலை பேசி எண்-1077, மற்றும் 7092255255 என்ற வாட்ஸ்சப் எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். எனவே, போதைப்பொ ருட்கள் மற்றும் கள்ளச்சாராயத்திற் கெதிரான விழிப்புணர்வு நடவடிக்கைக ளில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இப்பேரணியில், 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்பு ணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர். தொடர்ந்து, மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்தில்; மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.மீனா , முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி , மயிலாடு துறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ் , உதவி ஆணையர் (கலால்) ராஜகணேஷ், மயிலாடுதுறை நகர்மன்ற துணைத் தலை வர் சிவக்குமார் , மயிலாடுதுறை வட்டாட்சி யர் விஜயராணி, மயிலாடுதுறை நகர்மன் றக்குழு உறுப்பினர் சர்வோதயன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.