districts

img

திருவாரூரில் பருத்தி மறைமுக ஏலம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவாரூர், ஜூலை 10- திருவாரூர் மாவட்டம், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, திருவாரூர் விற்பனைக்குழுவின் கட்டுப் பாட்டில் இயங்கிவரும் திருவாரூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் பருத்தி மறை முக ஏலம் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சாருஸ்ரீ புதனன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.  திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு 2024 ஆம் ஆண்டு திருவாரூர், மன்னார்குடி, வலங்கைமான், குடவாசல் மற்றும் பூந்தோட்டம் ஆகிய ஒழுங்குமுறை விற்ப னைக்கூடங்களில் ஜூன் முதல் வாரத்தி லிருந்து பருத்தி மறைமுக ஏலம் நடை பெற்று வருகிறது. பிரதி வாரம் செவ்வாய்க் கிழமை காலை திருவாரூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்திலும், மாலை பூந்தோட்டம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலும், புதன் கிழமை மாலை வலங்கை மான் மற்றும் மன்னார்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திலும் மற்றும் வெள்ளிக் கிழமை மாலை குடவாசல் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திலும் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. மேலும், இதுவரை நடந்த பருத்தி மறை முக ஏலத்தில் 1328.78 மெட்ரிக் டன் அள வுள்ள பருத்தியானது விவசாயிகளிட மிருந்து பெறப்பட்டு ரூ.848.82 இலட்சம் மதிப்பில் வியாபாரிகள் கொள்முதல் செய்துள்ளனர். இதில் 18583 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். கடந்த வாரங்களில் அதிகபட்ச விலையாக குவிண்டாலுக்கு ரூ.7699-குறைந்தபட்ச விலையாக ரூ.6199-சராசரி விலையாக ரூ.6909.84-க்கும் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றுள்ளது. எனவே, இம்மறைமுக ஏலத்தில் விவ சாயிகள் தங்களது பருத்தியினை நன்கு மலர்ந்த பிறகு அறுவடை செய்ய வேண்டும். மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒரு முறை பருத்தியை செடியிலிருந்து எடுக்க வேண்டும். பிறகு நன்றாக சுத்தம் செய்து நிறம் மாறாமல் ஈரப்பதம் இல்லாமல் நன்கு உலர்த்தி பருத்தியைக் கொண்டு வந்து அதிகபட்ச விலையில் விற்பனை செய்து பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், விபரங்களுக்கு தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள திருவாரூர் (9445116346), மன்னார்குடி (8072033110), வலங்கைமான் (9787961868), குடவாசல் (8946028223) மற்றும் பூந்தோட்டம் (9500751036) ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூட பொறுப்பாளர்களை அணுகி உரிய தகவல்களை அறிந்துக்கொள்ளலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு திரு வாரூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) மற்றும் திருவாரூர் விற்பனைக்குழு செயலாளர் ஆகியோரை அணுகி தெரிந்து கொண்டு விவசாயிகள் பயன்பெறலாம். விவசாயிகளின் பருத்தி மழையில் பாதிப்படையாத வகையில் தற்காலிக கூரை களை முழுமையான முறையில் அமைத்து பாதுகாத்திடுமாறும், விற்பனைக்கூடத்தில் உள்ள தராசுகளை சரியான முறையில் முத்தி ரையிட்டு பயன்படுத்திடுமாறும் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் உள்ள அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர்  அறிவுறுத்தினார்.  இந்நிகழ்வில், வேளாண்மைதுறை இணை இயக்குநர் ஏழுமலை, வேளாண்மை துறை துணை இயக்குநர் (மாநில திட்டம்) திருவாரூர் விற்பனைக்குழு செயலாளர் (பொறுப்பு) தமல்லிகா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.