districts

திருச்சி முக்கிய செய்திகள்

தென்னூர் விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம்

பாபநாசம்,  ஜூலை 8 - தஞ்சாவூர் மாவட்டம் கீழக்கொட்டையூர் கிளை  தென்னூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது.  தென்னூரைச் சுற்றி யுள்ள பகுதிகளிலிருந்து 103 விவசாயிகள் ரூ.10, 22,286 மதிப்புடைய 15,128  குவிண்டால் பருத்தியை எடுத்து வந்தனர். கும்ப கோணம், பண்ருட்டி, விழுப்புரம், செம்பனார் கோயில் உள்ளிட்ட பகுதி களைச் சேர்ந்த 5 வணி கர்கள் பங்கேற்று அதிக பட்சம் ரூ.7,299, குறைந்த பட்சம் ரூ.5,509, சராசரி ரூ.  6,757 என விலை நிர்ண யித்தனர். பருத்தி மறை முக ஏலத்திற்கு கண்கா ணிப்பாளர் பிரியமாலினி தலைமை வகித்தார். மேற் பார்வையாளர் தாமஸ் முன்னிலை வகித்தார்.

மல்லிப்பட்டினம் தர்காவில் சுவரை உடைத்து உண்டியல் திருட்டு

தஞ்சாவூர்,  ஜூலை 8-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள சரபேந்திர ராஜன் பட்டினம் ஊராட்சி, மல்லிப்பட்டினத்தில், பட்டினம் கொஸ்ஸாலி தங்கள் வலியுல்லா தர்கா வில் இருந்த உண்டியலை  மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். மல்லிப்பட்டினம் கொஸ்ஸாலி தங்கள் வலி யுல்லா தர்காவில் திங்கள் கிழமை அதிகாலையில் தர்காவின் பக்கவாட்டுச் சுவரை பெயர்த்து, உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், தர்காவின் கதவை  உடைத்து, உள்ளே இருந்த உண்டி யலை திருடிச் சென்றுள்ள னர். இதனையறிந்த மல்லிப்பட்டினம் முகை தீன் ஜூம்ஆ பள்ளி நிர்வா கத் தலைவர் அல்லாப் பிச்சை, செயலாளர் அப்துர் ரஹீம் மற்றும்  நிர்வாகிகள், சேதுபாவா சத்திரம் காவல் நிலையத் தில் புகார் அளித்தனர்.  சம்பவ இடத்தை பார்வையிட்ட காவல் துறையினர் திருட்டு குறித்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

காவல்துறையினர் தாக்கி 2 பேர் படுகாயம்: கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கைது

அறந்தாங்கி, ஜூலை 8 - புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா  விச்சூர் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன், சிறுவன்  அருண்குமார் ஆகியோரை மணமேல்குடி காவல்துறையி னர் கைது செய்து கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் அவர்களுக்கு சிறுநீரகப் பாதிப்பு ஏற்படும் அளவிற்கு, படுகாயமடைந்து இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வருகின்றனர்.  இந்நிலையில், இதற்கு காரணமான மணமேல்குடி காவல் ஆய்வாளர் நாமிக்இப்ராஹிம், போலீசார்கள் குத்புதீன், தர்மா, ராஜேஷ், காவல் நிலைய எழுத்தர் ரகுநாதன், லட்சுமி  மற்றும் தொடர்புடைய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், போலீசாரை கண்டித்தும் திங்களன்று மணமேல்குடி காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு  உறுப்பினர் ஏ.ஸ்ரீதர், உறுப்பினர்கள் கரு. இராமநாதன், காளி தாஸ், ரபீக்கான் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர்  தமிழ்ச் செல்வன், நிர்வாகிகள் தொல் காப்பியன், கண்ணன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்த  காவல் நிலையம் அருகே திரண்டனர். அப்போது அங்கு  வந்த மணமேல்குடி காவல்துறையினர், சிஐடியு மாவட்டச்  செயலாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்தனர். ஜனநாயக முறையில் போராட்டம் நடத்த இருந்த சிபிஎம்  மற்றும் விசிக-வினரை கைது செய்த மணமேல்குடி காவல் துறைக்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் கவிவர்மன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அனைத்து வகை சான்றுகளையும் 15 நாட்களுக்குள் முடிக்க அறிவுறுத்தல்

புதுக்கோட்டை, ஜூலை 8 - பட்டா மாறுதல் நிலுவை மற்றும் தள்ளுபடி இனங்கள் குறித்து, நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் பி.மதுசூதன் ரெட்டி, மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா  முன்னிலையில் புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவல கத்தில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் தெரிவிக்கையில், “இந்த ஆய்வுகளின் போது, அனைத்து வகையான சான்றுகளையும் 15 நாட்களுக்குள்  முடித்திடவும், 7 முதல் 10 நாட்களுக்குள் முடிக்கக் கூடிய  சான்றுகளை காலதாமதமின்றி முடித்திடவும், முழுபுலம் பட்டா மாறுதல் மாதத்திற்கு எத்தனை விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன என்பது குறித்தும், அதிக எண்ணிக்கையி லான விண்ணப்பங்கள் எந்த கிராமத்தில் இருந்து பெறப்படு கின்றன என்பது குறித்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது. மேலும், தள்ளுபடிக்கான காரணங்களை கண்டறிந்து தள்ளுபடி சதவீதத்தினை 10 சதவீதத்துக்குள் வைத்துக் கொள்ளவும், F-Line விண்ணப்பங்களை இரண்டு மாதத்திற்கு  மேல் நிலுவையில் வைத்திருக்கக் கூடாது எனவும், சார்  பதிவாளர் அலுவலகத்தில் இருந்து வரப்பெறும் எஸ்டிஆர் பட்டா மாறுதல் இனங்களில் புல எண் மற்றும் உட்பிரிவு எண்கள் தவறாக குறிப்பிட்டு அனுப்புவதை தவிர்க்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறி வுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

அடிக்கடி விபத்து நிகழும் மேல சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா?

கும்பகோணம், ஜூலை 8- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் திகோ சில்க்ஸ் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இதன் அருகே  பேரூராட்சி அலுவலகம், விஏஓ அலுவ லகம், கன்னித்தோப்பு குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இங்கு ஏராள மானோர் வசித்து வருகின்றனர். அப்பகுதி மேல சாலையில்,  போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற் காக காவல்துறையினர் தற்காலிக மாக இரும்பினால் ஆன பேரிக்கார்டு களை அமைத்துள்ளனர். ஆனால் இரவு நேரங்களில் அதை அப்புறப்படுத்தா மல் அப்படியே விட்டுவிடுகின்றனர். இத னால் இருள் நேரத்தில் பேரிக்கார்டு இருப்பது தெரியாமல், வாகனங்கள் எதிரே வரும் நபர்கள் மீது மோதி, அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. ஒருவர் மரணம்; ஒருவர் கால் இழப்பு இந்நிலையில், திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றும் கீதா என்பவர் பணி முடித்து வீட்டிற்கு செல்லும்போது, திருபுவனம் மேல சாலையில் வேகத்தடை இல்லாததால்  விபத்துக்குள்ளாகி மரணமடைந்தார். அதே பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்ற மாணவரும் விபத்துக்குள்ளாகி, காலை இழந்து தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து பள்ளிக் குழந்தைகள் விபத்துக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே திகோ சில்க் பள்ளி அருகே, மேல சாலையில் தற்காலிக இரும்பு பேரிக்கார்டை காவல்துறையினர் அப்புறப்படுத்த வேண்டும். நெடுஞ் சாலைத் துறையினர் திருபுவனம் மேல சாலைப் பகுதியில் வேகத்தடை  அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின்  திருவிடைமரு தூர் வடக்கு ஒன்றியம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக வட்டாட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பி  உள்ளனர்.

திருவையாறு அரசு இசைக் கல்லூரியில் பகுதிநேர நாட்டுப்புறக் கலை பயிற்சி

தஞ்சாவூர், ஜூலை 8 -  தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில், திருவையாறு தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரியில் பகுதி நேர நாட்டுப்புறக் கலைப்பயிற்சி வகுப்புக்கான சேர்க்கை 01.07.2024 முதல் நடைபெற்று வருகிறது. பகுதி நேர நாட்டுப்புறக் கலைப் பயிற்சியில் திருவையாறு இசைக் கல்லூரி மையத்தில் இசை நாடகம், கும்மி, தப்பாட்டம் மற்றும் சிலம்பாட்டம் ஆகிய 4 கலைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.  இக்கலைப் பயிற்சி வகுப்புகள் 12.7.2024 முதல் தொடங்கப்படவுள்ளன. திருவையாறு இசைக் கல்லூரி வளாகத்தில் பிரதி வாரம் 2 நாட்கள் (வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை) மாலை 4 மணி முதல் 6 மணி வரை பகுதி நேரமாக நடைபெறும். ஓராண்டு கால சான்றிதழ் படிப்பாக நடத்தப்படும் பயிற்சியின் முடிவில் தேர்வு நடத்தப்பட்டு பல்கலைக்கழக சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சியில் சேர்வதற்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 17 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் சேரலாம். இப்பயிற்சிக்கு ஓராண்டுக்கான கல்விக் கட்டணம் ரூ.500 செலுத்த வேண்டும்.  மேற்காணும் தகுதியுடன் இக்கல்லூரியில் பகுதி நேர நாட்டுப்புறக் கலைப் பயிற்சியில் சேர விருப்பம் தெரிவிப்பவர்கள், திருவையாறு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள இசைக்கல்லூரிக்கு நேரிலோ அல்லது www.artandculture.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவோ விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம்.  கூடுதல் விபரங்களுக்கு 04362 - 261600, 9791466148 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

பயிர்க் காப்பீடு திட்டத்தை அரசே நடத்த கோரிக்கை

பாபநாசம், ஜூலை 8 - பயிர்க் காப்பீடு திட்டத்தை தமிழக அரசே முழுமையாக ஏற்று நடத்த வேண்டும். குறுவைத் தொகுப்புத் திட்ட கணக்கெடுப்பு பணியை உடனே தொடங்கி, பாரபட்சம் இல்லாமல் அனைத்து விவசாயி களும் பயனடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இன்சூரன்ஸ் பதிவு செய்ய வசதியாக தாமதமின்றி அடங்கல் சான்றுகளை கிராம நிர்வாக அலுவலர்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டாட்சியர் அலுவ லகம் முன்பு, அழுகிய பருத்தி செடியை கையிலேந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டச் செயலாளர் தர்மராஜன் தலைமை வகித்தார். பின்னர் தாசில்தாரிடம் மனு வழங்கப்பட்டது.  இதில் ஏஐடியுசி மாநிலச் செயலாளர் தில்லை வனம், சிபிஐ மாவட்டத் துணைச் செயலாளர் செந்தில்குமார், ஒன்றியச் செயலாளர் சேகர், தமிழ்நாடு  விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் புகழேந்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

தஞ்சையில் 434 ஏரி, குளங்களில் வண்டல் மண், களிமண் எடுக்கலாம் 

தஞ்சாவூர், ஜூலை 8 -  தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயப் பணி மற்றும் மண்பாண்டங்கள் செய்வதற்கு நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 434 ஏரி மற்றும் குளங்களில் வண்டல்  மண், களிமண் எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள்,  மண்பாண்டம் செய்பவர்கள் தாம் வசிக்கும் வட்டத்திற்கு  உட்பட்ட நீர்நிலைகளில் இருந்து மண் எடுக்க www.tn esevai.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க  வேண்டும். பின்னர் அவர்கள் சம்பந்தப்பட்ட வட்டாட்சி யர் அளவிலேயே அனுமதி பெற்று இலவசமாக வண்டல்  மண், களிமண் எடுத்துக் கொள்ளலாம். விவசாய பயன்பாட்டிற்காக விண்ணப்பம் செய்பவர்கள்,  தங்களது நிலம் தொடர்பான விவரங்களை இணை யத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்த விண்ணப்பங்கள் வருவாய் துறையினரால் சரிபார்க்கப்பட்டு தொடர்புடைய வட்டாட்சியர் அனுமதி வழங்குவார்.  மேலும் மண்பாண்டத் தொழில் பயன்பாட்டிற்கு விண்ணப்பம் செய்யும் மண்பாண்டத் தொழிலாளர்களின்,  மண்பாண்டத் தொழிலின் உண்மைத்தன்மை சான்று மற்றும் வசிப்பிடம் குறித்து கிராம நிர்வாக அலுவலரால் சான்று அளிக்கப்பட வேண்டும். வண்டல் மண், களிமண் எடுக்க வேண்டிய நீர்நிலைகள்  குறித்த விவரங்களை www.tnesevai.tn.gov.in என்ற  இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். சம்பந்தப்பட்ட  வட்டாட்சியர் அலுவலகத்திலும் தெரிந்து கொள்ள வசதி  செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

உரிமம் ரத்தான ஆலையில் பட்டாசு தயாரிப்பு
பட்டாசு ஆலை உரிமையாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு

சிவகாசி, ஜூலை 8- சிவகாசி அருகே உரிமம் இரத்து செய்யப் பட்ட பட்டாசு ஆலையில் சட்ட விரோதமாக  பட்டாசு தயாரித்ததால், ஆலை உரிமையா ளர் உள்ளிட்ட மூவர் மீது வழக்குப் பதிவு  செய்யப்பட்டது. சிவகாசி, சுப்பிரமணியன் கோவில்  தெருவை சேர்ந்தவர் நீராத்திலிங்கம். இவ ருக்கு சொந்தமான பட்டாசு ஆலையானது  போடுரெட்டியபட்டியில் உள்ளது. இந்த  ஆலையில் விதிமீறல் இருப்பது கண்டறி யப்பட்டது. எனவே, கடந்த 2023 நவம்பர் 10  அன்று ஆலையின் உரிமம் ரத்து  செய்யப்பட்டது. உரிமத்தை புதுப்பிக்க ஆலை நிர்வாகம்  விண்ணப் பித்த நிலையில், அதே பட்டாசு  ஆலையில் சட்ட விரோதமாக பேன்சி ரக  வெடிகள் அதிகமான தொழிலாளர்களை வைத்து தயாரிக்கப்பட்டது தெரிய வந்தது.  மேலும் தடை செய்யப்பட்ட சரவெடிகளும் தயாரிக்கப்பட்டன. எனவே, அங்கு ஆய்வு செய்த வரு வாய்த் துறையினர் ஒரு லட்சம் ரூபாய்  மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய் தனர். மேலும், ஆலை உரிமையாளர் நீராத்தி லிங்கம், போர்மேன் இருளப்பன், மேலாளர் சங்கர் ஆகியோர் மீது மாரனேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.