districts

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பருத்தி ஏலம் இன்று முதல் துவக்கம்

பாபநாசம், ஜூன் 11 - வேளாண்மை விற்பனை மற்றும்  வேளாண் வணிகத் துறை, தஞ்சாவூர்  விற்பனைக் குழு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்ப தாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு 2024 ஆம் ஆண்டு பாபநாசம், கும்பகோ ணம் மற்றும் திருப்பனந்தாள் உள்ளிட்ட  பகுதிகளில் உள்ள திட்டை, கோபுராஜ புரம், வடக்கு நாயகன் பேட்டை, தெற்கு நாயகன் பேட்டை, உத்தமதானபுரம், உமையாள்புரம், மெலட்டூர், முத்தூர், மகாஜனக்குடி, கொற்கை, சிவபுரம், நாச்சியார்கோவில், சேங்கனூர், பட்டம், மட்டியூர், கூனஞ்சேரி, மணிக் குடி உள்ளிட்ட சுற்று வட்டாரக் கிராமங்க ளில் சுமார் 8000 ஏக்கர் பரப்பளவில் பருத்திச் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.  தற்போது மேற்படி பகுதிகளில் பருத்தி அறுவடை பணிகள் நடைபெற்று  வருவதையொட்டி, தஞ்சாவூர் விற்ப னைக் குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பாபநாசம், கும்பகோணம், திருப் பனந்தாள் ஒழுங்குமுறை விற்ப னைக் கூடங்கள் மற்றும் தென்னூர் துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஜூன் 12 முதல் பிரதி வாரம்  புதன்கிழமை கும்பகோணம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்திலும், வியாழக் கிழமை திருப்பனந்தாள் ஒழுக்கு முறை விற்பனைக் கூடத்திலும், வெள்ளிக் கிழமை பாபநாசம் ஒழுங்குமுறை விற்ப னைக் கூடத்திலும் இந்த மறைமுக ஏலம்  காலை 11 மணியளவிலும், தென்னூர் துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பிரதி வெள்ளி மாலை 4 மணி யளவில் நடைபெறும்.  மேலும் நடப்பு ஆண்டும் திருப்ப னந்தாள் பகுதியில் உள்ள கீழ மணக் குடி கிராமத்தில் பருத்தி மறைமுக ஏலம்  நடத்த முன்னேற்பாடு பணிகள் நடை பெற்று வருகின்றன. எனவே இம்மறை முக ஏலத்தில் விவசாயிகள் தங்களது  பருத்தியினை அதிகபட்ச விலையில் விற் பனை செய்வதற்கு ஏதுவாக, அறு வடைக்கு பின் கீழ்க்காணும் தொழில் நுட்பங்களை கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. நிழல் உலர்த்தல், ரகம் பிரித்தல் வெடித்து நன்கு மலர்ந்த பருத்தியை  மட்டும் செடியிலிருந்து அறுவடை செய்ய வேண்டும். மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒருமுறை பருத் தியை அறுவடை செய்ய வேண்டும். பருத்தியை காலை நேரத்தில் சேகரம் செய்வது சிறந்தது. இதனால் காய்ந்த இலை சருகுகள் பருத்தியில் ஒட்டாது. அவற்றை நிழலில், மணல் பரப்பிய களங்களில் உலர்த்த வேண்டும். நேரடி வெயிலில் பருத்தியை உலர வைப்பதால் பஞ்சின் நிறம் குறைவது மட்டுமல்லாமல், அதன் மென்மைத் தன்மையும் பாதிக்கும்.  பருத்தியை ரகம் வாரியாக தனித் தனியே சேமிக்க வேண்டும். பருத்தியை  நன்கு உலர்த்திய பிறகு அதில் கலந் துள்ள இலைச் சருகுகள், தூசுகள், பூச்சி  நோய் தாக்கியது ஆகியவற்றை தனி யாகப் பிரித்து தரத்தை மேம்படுத்த வேண்டும். பருத்தியை காற்றோட்ட மான அறைகளில், மணல் பரப்பிய தரை யில் சேமிக்க வேண்டும். பருத்தியை உலர வைப்பதற்கு ஏதுவாக பாபநாசம் மற்றும் கும்பகோணம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் பயன்பாட்டில் உள்ள பருத்தி உலர்த்தும் இயந்திர வசதியை விவசாயிகள் பயன்படுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  எனவே விவசாயிகள் தரமான பருத்தியினை விற்பனைக்கு கொண்டு வந்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உள்ள உட்கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி, நல்ல விலை யில் விற்பனை செய்து பயன்பெற வேண்டும். மேலும் விபரங்களுக்கு தங்கள்  பகுதிக்கு அருகில் உள்ள கும்பகோ ணம் (994093140), பாபநாசம் (9790169702) மற்றும் திருப்பனந்தாள் (7339480137) ஆகிய ஒழுங்கு முறை விற்பனைக் கூட  பொறுப்பாளர்களை அணுகி உரிய தகவல்களை பெற்று பயன்பெறலாம்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.