நாகப்பட்டினம், டிச.28 - நாகப்பட்டினம் மாவட் டம் கீழ்வேளூரில் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் கடைத் தெருவில் சாலை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.லதா தலைமை வகித் தார். கீழ்வேளூர் பேரூ ராட்சிக்கு நூறு நாள் வேலைத்திட்டத்தை உடனடி யாக செயல்படுத்த கோரி யும், ரேசன் கடைகளில் வழங்கப்படுகிற அரிசியை நல்லதாக வழங்கக் கோரி யும் சாலை மறியல் போராட் டம் நடைபெற்றது. அரசு அதிகாரிகள், காவல்துறையி னர், வருவாய் துறையினர் போராட்டக் களத்திற்கு வந்து பேசியதின் அடிப்படையில், மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. போராட்டத்தில் மாதர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.சுபா தேவி, ஒன்றியத் தலைவர் ஆர்.வளர்மதி, ஒன்றிய பொருளாளர் அகிலா உள்ளி ட்டோர் கலந்து கொண்டனர்.