பெரம்பலூர், ஜூலை 25 -
முறைசாரா தொழிலாளர் நல வாரியத்தில் உள்ள குளறுபடிகளை சரி செய்யக் கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முறைசாரா தொழிலாளர் நலவாரிய குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும். ஆன்லைன் உறுப்பினர் பதிவை ரத்து செய்ய வேண்டும். நலவாரிய அலுவல கத்தில் நேரடியாக உறுப்பினர் பதிவை மேற்கொண்டு, உடனுக்குடன் உறுப்பி னர் அடையாள அட்டை வழங்க வேண்டும். பணப்பயன்களை இரட்டிப் பாக்கி தாமதம் செய்யாமல் வழங்க வேண்டும். தொழிலாளர்களின் ஓய்வூதி யத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். அனைத்து முறைசாரா தொழிலாளர்களுக்கும் வீடு கட்டும் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும்.
பென்சன் பெறும் அமைப்புசாரா தொழிலாளர் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கும், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் ஆயிரம் ரூபாய் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி ஆட்டோ, சாலை யோர வியாபாரிகள், கட்டுமானம், தையல், சுமைப்பணி, அனைத்து வகை ஓட்டுநர், உடலுழைப்பு தொழிலாளர் கள் (சிஐடியு) செவ்வாய்க்கிழமை மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் ரெங்கநாதன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.அகஸ்டின் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
திருச்சிராப்பள்ளி
சிஐடியு திருச்சி செங்குளம் காலனியில் உள்ள தமிழ்நாடு தொழிலா ளர் நலத்துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தரைக் கடை சங்க மாவட்டச் செயலாளர் செல்வி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் சீனிவாசன், மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் மற்றும் சிஐடியு புறநகர் மாவட்டத் தலைவர் சம்பத் ஆகியோர் பேசினர்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் ரயிலடியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் இ.டி.எஸ் மூர்த்தி தலைமை வகித்தார். சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால் சிறப்புரையாற்றினார். முறைசாரா தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.என்.பேர்நீதி ஆழ்வார், கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.சின்னை யன், சுமைப்பணி சங்க மாவட்டச் செய லாளர் த.முருகேசன், தரைக்கடை சங்கம் மாவட்டச் செயலாளர் எஸ்.மில்லர் பிரபு, டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கே.வீரையன், மக்களை தேடி மருத்துவம் திட்ட மாவட்டச் செயலாளர் சாய் சித்ரா, ஆட்டோ சங்க மாநகரச் செயலாளர் ஏ. ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.
திருவாரூர்
திருவாரூர் மாவட்ட முறைசாரா ஒருங்கிணைப்புக் குழு சார்பில் தொழிலாளர் நல அலுவலகம் முன்பு சிஐடியு மாவட்டத் தலைவர் என். அனிபா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செய லாளர் முருகையன், மாவட்ட பொரு ளாளர் இரா.மாலதி, மாநிலக் குழு உறுப்பினர் பிரேமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அரியலூர்
அரியலூர் ராஜாஜி நகரிலுள்ள தொழிலாளர் நல வாரியம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.கிருஷ்ணன் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன் ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்து பேசினார். சிஐடியு மாவட்டச் செயலா ளர் பி.துரைசாமி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் அருண்பாண்டி யன் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.