தஞ்சாவூர், அக்.17- மாநகராட்சி ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு நகராட்சி, மாநக ராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் செவ்வாயன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு, குழு வின் மாநிலத் துணைத் தலைவர் பி.மதிவா ணன் தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுச் செயலாளர் பி.பிரதான்பாபு, மாநிலச் செயலாளர் கரு.மணிவண்ணன், மாநில ஒருங் கிணைப்பாளர் இரா.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.கோதண்ட பாணி துவக்கி வைத்துப் பேசினார். குழுவின் மாநிலப் பொருளாளர் இரா.சுவாமிநாதன் கோரிக்கைகளை முன்வைத்து பேசினார். நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து கருவூலம் மூலம் ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணியிட மாறுதல்கள், பதிவு உயர்வு மாறுதல்களை கலந்தாய்வு மூலம் மேற்கொள்ள வேண்டும். அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண் டும். எல்லை விரிவாக்க பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். விடுமுறை தினங்களை தவிர்த்து, அலு வலக நேரத்தில் மட்டும் ஆய்வுக் கூட்டங்க ளையும், காணொலி வாயிலான கூட்டங்க ளையும் நடத்த வேண்டும். நகர, மாநகர சுகா தார செவிலியர்களுக்கு, பகுதி சுகாதார செவி லியர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும். நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களுக்கு கொ ரோனா கால ஊக்க ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்திப் பேசினர். தஞ்சாவூர், கும்பகோணம், மன்னார்குடி, திருவாரூர், நாகை, மயிலாடுதுறையில் உள்ள நகராட்சி, மாநகராட்சி பணியா ளர்கள் கலந்து கொண்டனர்.