திருவாரூர்,டிச.19- பைக் டாக்ஸியை தடை செய்ய முடியாது என கார்ப்பரேட் நிறுவனங்க ளுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.சிவசங்கரின் நடவடிக்கை ஆட்டோ தொழிலை பாதிக்கும் வகையில் உள்ளது. பைக் டாக்ஸிகளுக்கு அனுமதி இல்லை. பைக் டாக்ஸி பயன்படுத்தவோர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஒவ்வொரு போக்கு வரத்து துறை மண்டல அலுவலகமும் போக்குவரத்து ஆணையர் அலுவல கத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று போக்குவரத்து ஆணையர் மூலம் வெளி யிட்ட அரசாணையை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி திருவாரூ ரில் சிஐடியு ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஆ.அரிகரன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் டி.முருகையன், சிஐடியு மாவட்ட செயலாளர் அனிபா, மாவட்ட பொருளாளர் மாலதி, மாவட்ட நிர்வாகி சீனி மணி, மாவட்டத் துணைத் தலைவர் ஜோதிபாசு மற்றும் ஆட்டோ தொழிலாளர் சங்க நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.