திருச்சிராப்பள்ளி, ஜூலை 29 -
மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க 28-வது பொது மாநாடு திருச்சி யில் சனிக்கிழமை நடந்தது. மாநாட்டிற்கு மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தலைவர் பிரபு தலைமை வகித்தார்.
மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க பொதுச் செயலாளர் பாண்டிய ராஜன் அறிக்கையை வாசித்தார். வரவு - செலவு அறிக்கையை மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க பொருளாளர் செந்தில் நாயகம் சமர்ப்பித்தார். காப்பீட்டு ஊழியர் சங்க தஞ்சை கோட்ட தலைவர் செல்வராஜ், சிஐடியு மாநகர் மாவட்ட செய லாளர் ரெங்கராஜன், பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியர் சங்க மதுரை மாவட்ட துணைத் தலைவர் மணிவேல், பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க சென்னை மண்டல தலைவர் பாலகிருஷ்ணன், பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க கோவை மண்டல பொதுச் செயலாளர் வேணுகோபால் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். காப்பீட்டு கழக ஊழியர் சங்க முன்னாள் தலைவர் சுவாமிநாதன் சிறப்புரை ஆற்றினார்.
நான்கு பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறு வனங்களை ஒன்றிணைக்க வேண்டும். பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களில் அதி காரிகள், வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் ஊழி யர்கள் என அனைத்து பிரிவுகளிலும் பல்லா யிரக்கணக்கில் காலியாக உள்ள பணியி டங்களை உரிய முறையில் உடனே நிரப்ப வேண்டும்.
புதிய பென்சன் திட்டத்தை கைவிட்டு, பழைய பென்சன் திட்டத்தை அமல் படுத்த வேண்டும். குடும்ப ஓய்வூதியத்தை 15 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்த்த வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். தொழிற்சங்க உரிமைகளை பறிக்கும் தொழிலாளர் சட்டத்திருத்த மசோ தாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும். மணிப்பூரில் உடனடியாக அமைதியை திரும்பச் செய்வதற்கும், பாதிப்புக்கு ஆளாகியுள்ள மக்கள் அனை வருக்கும் நீதியும், நிவாரணமும் கிடைக்க ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை விரைவில் சட்டமாக்க வேண்டும். ஒன்றிய அரசு, பொதுத்துறை விரோத, தாராளமய, தனியார்மய, கார்ப்ப ரேட் ஆதரவு கொள்கைகளை முற்றிலு மாக கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தென் மண்டல துணைத்தலைவர் புஷ்பராஜன் நிறைவுரையாற்றினார். முன்னதாக திருச்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் வினோத் வர வேற்றார். மதுரை மண்டல பொது இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்க துணைப் பொருளாளர் மனோஜ் கார்த்திக் நன்றி கூறினார்.