திருவாரூர்/புதுக்கோட்டை, அக்.2 - திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவ லக வளாகத்தில் காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை திருவா ரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தொடங்கி வைத்தார். காந்தி ஜெயந்தியை ஒட்டி, அண்ணல் காந்தியடிகள் உருவப் படத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்து மலர்தூவி மரி யாதை செலுத்தினார். தொடர்ந்து தீபாவளி கதர் சிறப்பு விற்பனை, நடப்பாண்டில் திருவாரூர் மாவட் டத்திற்கு ரூ.120 லட்சம் விற்பனை குறியீ டாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறி யீட்டினை அடைவதற்கு கதர் துறையால் தயார் செய்யப்படும் அசல் வெள்ளி சரிகை, பட்டு ரகங்கள், கதர் ரகங்கள், பாலிஸ்டர் ரகங்கள், உல்லன் ரகங்கள் ஆகியவை வாடிக்கையாளர்களை கவ ரும் வண்ணம் புத்தம் புதிய வடி வமைப்பில் உள்ளன. மேலும், முழுவதும் சுத்தமான இலவம் பஞ்சினால் மிக நேர்த்தியாக தயார் செய்யப்பட்ட மெத்தை மற்றும் தலையணைகள், மெத்தை விரிப்புகள், கதர் அங்காடியில் இருப்பில் உள்ளன. இவையனைத்தும் மன்னார்குடி கதர் அங்கா டியில் கிடைக்கும். நிகழ்ச்சியில், கதர் கிராமத் தொழில்கள் உதவி இயக்குநர் (கூ.பொ) தி.கோபால கிருஷ்ணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வ குமார், கதர் அங்காடி மேலா ளர் ராஜகுமார், வட்டாட்சியர் செந்தில்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை புதுக்கோட்டை கதர் அங்காடியில் தீபா வளி சிறப்பு விற்பனையாக ரூ.70 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார். தீபாவளி கதர் சிறப்பு விற்பனையைத் தொ டங்கி வைத்து அவர் இவ்வாறு தெரி வித்தார். செய்தி மக்கள் தொடர்பு அலுவ லர் க.பிரேமலதா, மேலாளர் (கதர் கிராமத் தொழில்கள்) ரெ.திருமோகன், வட்டாட்சியர் பரணி, திட்ட அலுவலர் ஏ.ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.