தஞ்சாவூர், அக்.19 - தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் சனிக்கிழமை 14 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு வந்தவர்களை பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திரு வள்ளுவன் வரவேற்றார். விழாவில், முனைவர் பட்டம், ஆய்வியல் நிறைஞர் பட்டம், முதுகலை, இளங்கலை பட்டங்க ளைப் பெற்ற 668 மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கி னார். தொடர்ந்து காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக் கழக துணைவேந்தர் ந.பஞ்சநதம் உரையாற்றினார்.