மயிலாடுதுறை, ஜூலை 19- மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம் பாடியில் உள்ள தூய தெரசா மகளிர் கல்லூ ரியில் வியாழனன்று பட்டமளிப்பு விழா நடை பெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் மேஜர் முனை வர் வீ.காமராசன் தலைமை வகித்தார். கல்லூரியின் தலைவர் அருட்சகோதரி செபஸ் டினா பிரான்சிஸ், செயலர் அருட்சகோதரி கருணா ஜோசப் பாத் ஆகியோர் முன் னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் ஆர்.எம்.கதிரே சன், இளங்கலை மற்றும் முதுகலை மாணவிகள் 320 பேருக்கு பட்டங்களும், பல்கலைக்கழக அளவில் மூன்று இடங் களை பெற்ற மாணவிக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கி வாழ்த்தி னார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அருட்சகோதரிகள் மற்றும் அருட்தந்தைகள், கல்வியாளர்கள் கலந்து கொண்டனர்.