சின்னாளபட்டி, டிச.13- திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே உள்ள விஜய் மேலாண்மை கல்லூரியில் 11 ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளியன்று கல்லூரி அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் நிறுவனர் டாக்டர் விஜயராக வன் தலைமை தாங்கினார். கல்லூரியின் டீன் டாக்டர் சமுத்திரராஜ்குமார் நிகழ்ச்சியை துவங்கிவைத்தார். சிறப்பு விருந்தினர் அணில் சேமியாவின் இயக்குனர் சுகுமார் மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசும்போது, தங்கள் நிறுவனம் உயருவதற்கு காரணம் தன்னம்பிக்கை, சுய ஒழுக்கம், நேர்கொண்ட பார்வை, விடா முயற்சி. இந்த தாரக மந்திரங்களை கடைப்பிடித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்றார். முதல்வர் ஸ்வர்ணலதா ஆண்டறிக்கை வாசித்தார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி டாக்டர்.கிருஷ்ணபிரியா, டாக்டர் அஜய் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் துறைத் தலைவர் ஜெயசுனிதா நன்றி கூறினார். இதில், பெற்றோர்களும் ஆசிரிய ஆசிரியைகளும் கலந்து கொண்டனர்.