districts

img

மயிலாடுதுறையில் தொடர் கனமழை 4 நாட்களாக மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை

மயிலாடுதுறை, பிப்.2- வங்கக் கடலில் உருவான காற்றழுத்த  தாழ்வு மண்டலத்தால் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மயிலாடுதுறை மாவட்ட த்தில் உள்ள 26 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் படகுகளை கடற்கரையில் நிறுத்தி வைத்துள்ளனர். தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகத் தமிழகத்தின் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால், மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லக்கூடாது என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியிருந்தது.  இந்நிலையில் கடந்த 4 நாட்களாக மயிலாடுதுறை மாவட்டம், முழுவதும் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. தரங்கம்பாடி, பூம்புகார்,சீர்காழி உள்ளிட்ட  26 மீனவ கிராம மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வீட்டிலேயே உள்ளனர். 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 5000க்கும் மேற்பட்ட பைபர் படகுகள்,  நாட்டுப் படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவ மக்கள் கூறுகின்றனர்.

;