districts

img

நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர்கள் வாயிற்கூட்டம்

திருவாரூர், நவ.24-  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக பொது தொழிலாளர் சங்கம் (சிஐ டியு), திருவாரூர் மண்டலம் சார்பாக, திருவாரூர் முது நிலை மண்டல மேலாளர்  அலுவலகம் முன்பு கோரிக்கை களை வலியுறுத்தி வாயில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மண்டலத் தலைவர் கே.எஸ்.இராஜா தலைமை வகித்தார். மண்ட லச் செயலாளர் சி.ஆர்.அண்ணாதுரை, பொதுச் செயலாளர் ஆர்.புவ னேஸ்வரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். இதில் சிஐ டியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன், தலைவர் எம்.கே.என். அனிபா மற்றும் டிஎன்சிஎஸ்சி, சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  2013 முதல் 2016 வரை அனைத்து பருவகால ஊழியர்களையும் உடனடி யாக பணி நிரந்தரம் செய்திட  வேண்டும். தேசிய நுகர் வோர் கூட்டமைப்பு மூலம் தனியார் அமைப்புகள் நெல்  கொள்முதல் செய்வதை கை விட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் கூட்டம்  நடைபெற்றது.