districts

சேவை குறைபாடு: ரூ.26 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

நாமக்கல், டிச.13- சேவை குறைபாடு செய்த தனியார்  வாகன விற்பனை நிறுவனம், பாதிக்கப்பட்ட வருக்கு ரூ.26 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள காந்தி நகரைச் சேர்ந்தவர்  சிவக்குமார். இவர் அசோக் லேலாண்ட் நிறுவ னத்தால் தயாரிக்கப்பட்ட சரக்கு வாகனம் ஒன்றை, நாமக்கல் - சேலம் சாலையிலுள்ள தனியார் டீலரிடம் (சுவர்ணாம்பிகை மோட் டார்) கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பரில் வாங்கியுள்ளார். இந்த வாகனத்துக்கு வாகன உற்பத்தியாளரால் ஓராண்டு காலம் உத்தர வாதம் வழங்கப்பட்டிருந்தது. ரூ.5,250 கூடுத லாக செலுத்தினால் மூன்றாண்டுகளுக்கு உத் தரவாதம் வழங்கப்படும் என்று வாகனத்தை  விற்பனை செய்த டீலர் தெரிவித்துள்ளார். அந் தத் தொகையையும் சிவக்குமார் செலுத்தி யுள்ளார். வாகனமானது முறையாக 5 ஆயி ரம், 10 ஆயிரம், 15 ஆயிரம் கிலோமீட்டர் ஓடிய போது வாகனத்துக்கு டீலர், கட்டணமில் லாத சர்வீஸ் செய்து கொடுத்துள்ளார். வாக னம் 30 ஆயிரம் கிலோமீட்டர் இயக்கப்பட்ட நிலையில், கொரோனா தொற்று காரணமாக பொது முடக்கம் ஏற்பட்டதால் நான்காவது கட்டணமில்லா சர்வீஸை சிவக்குமார் பெற இயலவில்லை. உள்ளூரிலேயே வாகனத் துக்கு ஆயில் மாற்றி, வாகனத்தை பொது முடக்க காலத்தில் அத்தியாவசிய பொருட் களை கொண்டு செல்வதற்கு இயக்கி வந் துள்ளார். கொரோனாவிற்கு பின்னர் 50 ஆயிரம் கிலோ மீட்டர் வாகனம் ஓடிய நிலையில், டீல ரிடம் வாகனத்தை சர்வீசுக்கு கொடுத்துள் ளார். 30 ஆயிரம் கிலோமீட்டர் சர்வீஸை உத்த ரவாத விதியின்படி, விநியோகஸ்தரிடம் செய் யாமல் வெளியில் செய்து கொண்டதால் உத் தரவாதம் இனிமேல் வழங்கப்பட மாட்டாது  என்று வாகன சர்வீஸ் டீலர் தெரிவித்துள் ளார். வாகனத்தில் பழுதுபட்ட பாகங்களை மாற்ற ரூ.13,788யை வாகன சர்வீஸ் டீலர் சிவக்குமாரிடம் கேட்டுள்ளார். வாகனம் இல் லாமல் தொழில் செய்ய முடியாது என்பதால்  சிவகுமார் அந்த தொகையை செலுத்தி வாகனத்தை சர்வீஸ் செய்து பெற்றுள்ளார். இதுகுறித்து நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் விற்பனை செய்தவரும், சர் வீஸ் டீலருமான தனியார் நிறுவனம் மீது சிவக் குமார் வழக்கு தாக்கல் செய்தார். விசாரணை முடிவடைந்த நிலையில், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி வீ.ராமராஜ், உறுப்பினர்கள் ஆர்.ரமோலா, என்.லட்சு மணன் ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். அதில், வாகன விற்பனை மற்றும் சர்வீஸ் டீலர் சேவை குறைபாடு புரிந்துள்ளதால் வாடிக்கையாளர் செலுத்திய ரூ.13,788 மற் றும் வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட சிரமங்க ளுக்கு இழப்பீடு மற்றும் வழக்கின் செலவு தொகையாக ரூ.13 ஆயிரம் ஆகியவற்றை நான்கு வார காலத்துக்குள் வழக்கு தாக்கல்  செய்தவருக்கு வழங்க வேண்டும் என உத்தர விடப்பட்டுள்ளது.