districts

img

அரசியல் சட்ட பாதுகாப்பு மாநில கருத்தரங்கம்

திருச்சிராப்பள்ளி, பிப்.8- தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு சார்பில் இந்திய அரசியல் சட்ட பாது காப்பு மாநில சிறப்பு கருத்தரங்கம் திருச்சி யில் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு மாநிலத் தலைவர் எஸ். நூர்முகமது  தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர், வழக்கறிஞர் டி.வின்சென்ட், மாவட்ட துணை தலைவர் எம்.சிராஜூதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் எம்.ராம கிருஷ்ணன் துவக்கி வைத்தார். மாநிலப் பொருளாளர் எம்.அகமதுஉசேன், சட்ட மன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், சமூக செயற்பாட்டாளர் எஸ்.ஸ்ரீதர், தமிழ்  நாடு மக்கள் ஒற்றுமை மேடை மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அரு ணன், சிறுபான்மையினர் ஆணைய தலை வரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பி னருமான எஸ்.பீட்டர் அல்போன்ஸ் ஆகி யோர் உரையாற்றினர்.  முன்னதாக மாவட்டச் செயலாளர் எம்.ஐ.ரபீக் அஹமது வரவேற்றார். மாவட்ட  துணைக்தலைவர் ஏ.ஜோன்ஸ் நன்றி கூறி னார்.